வியாழன், 7 பிப்ரவரி, 2013

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர்!





புதன், 06 பிப்ரவரி 2013

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர்!"மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் மற்றும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங்கை நான் சிறையிலோ அல்லது வெளியிலோ சந்தித்தது இல்லை" என்று அண்மையில் பிரபல இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார்.
...

ஆனால் தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மாலேகான் மற்றும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங்குடன் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இருப்பது போன்ற புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது. முழுப் பூசணிக் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர்!காயை சோற்றில் மறைத்த ராஜ்நாத் சிங் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ள புகைப் படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என தெரிய வில்லை. சமீபத்தில் பாஜகவிலுள்ள உமா பாரதி, தீவிரவாதி பிரக்யா சிங்கை நேரடியாக சிறையிலேயே சென்று சந்தித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்றைத் திட்டமிட்டே செய்வார்கள்; முடிந்ததும், அய்யய்யோ அப்படி நடந்துவிட்டதே! அவ்வாறு நடந்தபோது நான் கண்ணீர் விட்டு அழுதேன் என தேர்ந்த நடிகனைவிட மேலாக ஊடகத்தின் முன்னிலையில் நடிப்பார்கள்! நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட பதுமைகள்! இதுதாண்டா பாஜக!


 

இந்நேரம் இணையதளம் : http://www.inneram.com/

இந்நேரம் பேஸ்புக் :
http://www.facebook.com/inneram?ref=ts&fref=ts
மேலும் பார்க்க

"பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக ஏன் இன்னும் அப்பீல் செய்யவில்லை? – உச்சநீதிமன்றம் கேள்வி!

 
7 Feb 2013

டெல்லி:பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஏன் இன்னும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவில்லை என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
...

பாபர் மசூதியை இடிக்க சதி செய்ததாக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து அத்வானியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக சி.பி.ஐ. கூறி இருந்தது. ஆனால் இதுவரை அப்பீல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது நீதிபதிகள், அத்வானிக்கு எதிராக அப்பீல் செய்ய காலதாமதம் செய்வது ஏன்? என்று சி.பி.ஐ.க்கு கேள்வி விடுத்தனர். மேலும் இதுதொடர்பக விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/

தூது பேஸ்புக் :
http://www.facebook.com/ThoothuOnline
மேலும் பார்க்க


ஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை: நந்திதா தாஸ்

இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக கொண்டாடப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும், ஜெர்மன் அதிபர் ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்தவர் நந்திதா தாஸ், இவர் படத்தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட சினிமாக்களில் ந...
டித்துள்ளார். இவர் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்துள்ளார். வதோதராவில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது,

"ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.

மேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார்.

கலவரத்தை மறக்க முடியுமா?

2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்றும் நந்திதா தாஸ் கூறினார்.


via Page Puthiya Thalaimurai Tamil News Channel



ஜெயா பிளஸ் டிவியின் கேள்விக்கணைகள் நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கு பெற்றார். அதில் விஸ்வரூபம் விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். நாள்: 05.02.2013.



 
ஜெயாபிளஸ் டிவியில் M.H.Jawahirullah

03-02-2013 தந்தி tv யில் என்ன கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்யில் M.H ஜவாஹிருல்லா MLA





En Kelvikku Enna Bathil -2013-02-03- Jawahirullah, MMK MLA, Speaks About Kamal & His Movies 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு




 
 
 
தமிழனின் மற்றுமொரு பெருமை !

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
...

சேலம்:""காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,'' என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்க முடியும் என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து விசைத்தறி தொழிலாளி, நம்மிடம் பெருமையுடன் கூறினார்.

இரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. வாழ்க்கையில் பெயர் சொல்லும் வகையில் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே இருந்தது.சில ஆண்டுக்கு முன், 25 மூலிகைகளை கொண்டு கூந்தல் பவுடர் தயார் செய்தேன். பின்னர், வேகத்தடையை தாண்டி வாகனங்கள் செல்லும் போது, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கண்டுபிடித்தேன்.தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன். இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.

என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது. நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது.ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்டவேண்டும். நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி : குணசீலன் வேலன்


இன்று உலக புற்றுநோய் தினம்: Control-Alt-Delete அழுத்தி அழிப்போம் வாருங்கள்!



 

ஒவ்வொரு வருடமும் இன்றைய தினம் (பிப்ரவரி மாதம் 4ம் திகதி) உலக புற்றுநோய் தினமாக அனுஷ்டிக்கப் படுகிறது.

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் முன் காப்போம் என்று நம்மை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே இந்த தினத்தை நாம் பார்க்கலாம். கிட்டத்தட்ட்ட மூன்றில் ஒரு பங்கு புற்று நோய்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அவற்றை பற்றிய போதுமான விழிப்புணர்வு இருந்தால் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.

புற்றுநோய் என்பது எம்மால் தினந்தோறும் பேசப்படும் ஒரு விடயமல்ல என்ற போதும், எமக்கு நெருங்கியவர்கள் யாரையாவது நிச்சயம் இதனால்

இழந்திருப்போம்
.

கமல்ஹாசன் புற்றுநோயால் உயிரிழந்த திரைப்படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம். கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் புற்றுநோய்க்கு எதிராக போராடிய போது, பேஸ்புக்கில் நூற்றுக்கான செய்திகள் பரிமாறிக்கொண்டோம். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் உயிரிழந்தார் என கேள்விப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான அஞ்சலிகளை பகிர்ந்து கொண்டோம். அவ்வளவு தானா, அவற்றுடன் புற்றுநோயை மறந்துவிடப்போகிறோமா
?

புற்றுநோய் என்பது வலியை விட கொடியது, தலைமுடி உதிரும், உடல் பலவீனமடையும், உடலில் புள்ளிகள் உண்டாகும் என பலரும் நினைக்கலாம். உண்மையில் அவர்கள் பயப்படுவதும், கோபப்படுவதும், இந்த பிரச்சினைகளுக்காகவா அல்லது புற்றுநோய் விரைவில் அவர்களின் உயிரை பறிக்க போகிறது என்பதற்காகவா
?

இங்கு கவனிக்கப்பட வேண்டியது புற்றுநோயுடன் வாழ்பவருக்காக பரிதாப்படுவது அல்ல. அவர்களுக்கு உங்கள் பரிதாபம் தேவையில்லை. மாறாக உங்கள் அன்பும், புரிந்துணர்வும், ஆதரவும் தேவைப்படுகிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்கள் நோயாளிகளாக முழுவதும் மாறிவிடப்போவதில்லை
.

அவர்கள் குறுகிய காலத்தில் உயிரிழக்கும் நிலைக்கு சென்றாலும் அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை அவர்களை முழுமையானதாக திருப்திப்படுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்
.

நீங்கள் அப்படிப்பட்ட ஒருவர் மீது காட்ட நினைக்கும் பரிதாபமும், அனுதாபமும் அவர்களை மேலும் பயத்திற்குள் தள்ளிவிடுகிறது. மாறாக, அவர்களை உற்சாக படுத்துங்கள். அவர்களது பயத்தை தோற்கடியுங்கள். உங்களை போன்ற சக மனிதராக பாருங்கள். உலகின் புற்றுநோய் 47% வீதம் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்படுகிறது. 55% வீதமானோர் அங்கு தான் புற்றுநோயால் உயிரிழந்து போகின்றனர்
.

ஆனால் வளரும் நாடுகள் அலட்சியமாக இருந்தால், 2030 இல் புற்றுநோய் 81% வீதம் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டை தாக்க கூடிய அபாயம் இருக்கிறது. 2030 இல் வருடத்திற்கு 21.4 மில்லியன் புற்றுநோயாளிகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இணங்காணப்படலாம் என எதிர்வு கூறியுள்ளது சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்
.

விமானப்பயணத்தில் உங்களுக்கு விமான பணிப்பெண்கள் ஒரு விடயம் சொல்வார்கள். 'மற்றவர்களுக்கு உதவும் முன்னர் நீங்கள் ஒட்சிசன் முகமூடிகளை போட்டுக்கொள்ளுங்கள்
'.

இது தான் புற்றுநோய் தொடர்பிலும் சொல்லக்கூடியது. அல்ககோல், புகைப்பிடிக்கும் பழக்கம், சுகாதாரமின்மை, உடற்பருமன் அதிகரித்தல், உடற்பயிற்சி இன்மை இப்படி எதுவுமே புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது
.

ஒவ்வொரு வருடமும் உலகில் 22 % வீதமான புற்றுநோய் தாக்கம் புகையிலை மூலமே வருகிறது என்கிறது ஒரு ஆய்வுத்தகவல். புகையிலை உபயோகிப்பதால் நுரையீரல் உணவுக்குழாய், குரல்வளை, வாய், தொண்டை, சிறுநீரகம் சிறுநீர் பை, கணையம் மற்றும் வயிறு மற்றும் வயிறு தொடர்பான இடங்கள், கருப்பை வாய் புற்று என்று இத்தனை வகை புற்றுநோய் உருவாகிறது. புகைபிடிக்கும் பழக்கம் என்பது, அவர்களுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருப்போருக்கும் பாதிப்பை தருகிறது
.

இன்றைய புற்றுநோய் தினத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடிய நான்கு நம்பிக்கைகளும், உண்மைகளும் இவை
.

1.
நம்பிகை : புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடை விடயம் என நினைக்கிறோம்
.
ஆனால் உண்மை : சுகாதாரத்துடன் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது
.

2.
நம்பிக்கை : புற்றுநோய் என்பது நன்கு ஆரோக்கியமான, முதிர்ந்த, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மாத்திரமே ஏற்படுகிறது என நினைக்கிறோம்
.
ஆனால் உண்மை : புற்றுநோய் உலக பிரச்சினை. அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் தாக்குகிறது
.

3.
நம்பிக்கை : புற்றுநோய் என்பது ஒரு மரண தண்டனை என நினைக்கிறோம்
.
ஆனால் உண்மை : புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள்
.

4.
நம்பிக்கை : புற்றுநோய் என்பது என் விதி என நினைக்கிறோம்
.
ஆனால் உண்மை : நீங்கள் போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும்
.

எனவே இவற்றை கருத்தில் கொள்ளுங்கள். புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் எந்தவித அச்சமுமின்றி இன்றே அருகில் உள்ள மருத்துவரை நாடி தெளிவடைந்து கொள்ளுங்கள். புற்றுநோயை தடுப்பதற்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சையும், உங்களை சுற்றியுள்ள சுற்றத்தாரின் ஆதரவும் நிச்சயம் தேவை.

கட்டுரையாளர் : Rahul Verma (co-founder of Uday Foundation, a non-profit working on health and dignity)
நன்றி (தகவல் மூலம்) : TOI
மொழிபெயர்ப்பு : ஸாரா
- 4TamilMedia செய்திகள்