வியாழன், 7 பிப்ரவரி, 2013

"பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக ஏன் இன்னும் அப்பீல் செய்யவில்லை? – உச்சநீதிமன்றம் கேள்வி!

 
7 Feb 2013

டெல்லி:பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஏன் இன்னும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவில்லை என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
...

பாபர் மசூதியை இடிக்க சதி செய்ததாக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து அத்வானியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக சி.பி.ஐ. கூறி இருந்தது. ஆனால் இதுவரை அப்பீல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது நீதிபதிகள், அத்வானிக்கு எதிராக அப்பீல் செய்ய காலதாமதம் செய்வது ஏன்? என்று சி.பி.ஐ.க்கு கேள்வி விடுத்தனர். மேலும் இதுதொடர்பக விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/

தூது பேஸ்புக் :
http://www.facebook.com/ThoothuOnline
மேலும் பார்க்க