சனி, 23 ஜூன், 2012

ஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி




ஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute of Astrophysics) நிறுவப்பட்டுள்ளது. இத்தொலைநோக்கிக்கு, இந்திய வானியல் முன்னோடியான வைணி பப்பு (Vaini Bappu) அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொலைநோக்கி நிறுவுவதற்கு தேர்வு செய்யப்படும் இடம் சில பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். சிறிது உயரமான இடமாகவும், வருடத்துக்கு பல நாட்கள் மேகமூட்டமில்லாமலும், நகர வெளிச்சத்தால் பாதிக்கப்படாமலும் அவ்விடம் இருக்க வேண்டும். இப்பண்புகள் அமையப்பெற்றிருந்ததால், காவலூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்வூர் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

தமிழகத்தில் வான்வெளி ஆய்வுமையம் முதலில் கொடைக்கானல் மலையில் தான் அமைக்கப்பட்டது. 1960-ல் அவ்வாய்வு மையத்தின் இயக்குனராகப் பொறுப்பேற்ற எம்.கே வைனுபாப்பு தான் சவ்வாது மலையில் வான்வெளி ஆய்வுக்கு மிக‌வும் பொருத்த‌மான‌ இவ்விட‌த்தைத் தேர்வு செய்த‌வ‌ர். வ‌ருட‌த்தில் அதிக‌ப‌ட்ச‌மாக‌ 220 இர‌வுக‌ள் வ‌ரை விண்மீன்க‌ள் ம‌ற்றும் கோள்க‌ள் தொட‌ர்பாக‌ ஆய்விற்கு உக‌ந்த‌தாக‌ இங்கு வான்வெளி அமைந்த‌தால் காவ‌லூர் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌தாம்.

இங்கு நாளும் ஆய்வுப்ப‌ணிக‌ளை மாலை ஆறு ம‌ணிக்குப் பிற‌குதொட‌ங்குகிறார்க‌ள். குறிப்பாக‌ விண்வெளியில் உல‌வும் ப‌ல‌வித‌மான‌ விண்மீன்க‌ள் குறித்து ஆய்வுக‌ள் ந‌டைபெறுகின்ற‌ன‌. குறிப்பிட்ட‌ விண்மீன் பூமியிலிருந்து எவ்வ‌ள‌வு தொலைவில் இருக்கிற‌து? அத‌ன் வய‌து? அத‌ன் வெப்ப‌ம்? அதை சுற்றி இருக்கும் காற்று ப‌ற்றி…இப்ப‌டி ப‌ல‌ சேதிக‌ளை ஆண்டுக‌ண‌க்கில் தொட‌ர் ஆய்வு மூல‌ம் சேக‌ரிக்கிறார்க‌ள். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள‌ப்ப‌டும் குறிப்பிட்ட‌ விண்மீனுக்கு த‌னிப்பெய‌ர், எண் கூட‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து. இறுதி செய்ய‌ப்ப‌டும் ஆய்வ‌றிக்கை அமெரிக்காவில் உள்ள‌ ச‌ர்வ‌தேச‌ அறிவிய‌ல் ஆய்வு மைய‌த்தின் ஒப்புத‌லுக்கு பிற‌கு வெளி உல‌குக்கு அறிவிக்க‌ப்ப‌டுகிற‌து.

இவ்வாய்வுமைய‌த்தின் சாத‌னைக‌ளில் குறிப்பாக‌, உல‌க‌ அள‌வில் யுரேன‌ஸ் கிர‌க‌த்துக்கு ஒளிவ‌ளைய‌ம் இல்லை என்றிருந்த‌ ஆய்வு முடிவு த‌வ‌று என்றும், ஒளிவ‌ளைய‌ம் யுரேன‌ஸ் கிர‌க‌த்துக்கு உண்டு என்ப‌தை உறுதிப‌டுத்தியுள்ள‌ன‌ர். அதேபோல் ச‌னிகிர‌க‌த்துக்கு ஜ‌ந்தாவ‌து ஒளிவ‌ளைய‌ம் இருப்ப‌தை இம்மைய‌மே உறுதி செய்துள்ள‌து.

ஆசிய‌ அள‌வில் மிக‌ப் பெரிய‌ தொலைநோக்குக் க‌ருவியான (2.3 மீட்ட‌ர்) 93 அங்குலம் விட்ட‌ம் கொண்ட‌ தொலைநோக்குக் க‌ருவி இங்கு அமைந்துள்ள‌து. இந்த‌ ஆய்வு மைய‌த்தை த‌ன‌து இருப‌து ஆண்டுகால‌ க‌டும் உழைப்பால் உருவாக்கிய‌ வைனு பாப்பு 1982ல் ம‌றைந்தார். அத‌ன்பின் 06-06-1986-ல் இம்மையத்திற்கு வைனு பாப்புவின் பெயர் சூட்டப்பட்டது.

இவ்வாய்வு மையத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு சனிக்கிழமைகளில் மட்டும் அனுமதி அளிக்கின்றனர் மாலை 6 மணி முதல் 6 அங்குல தொலை நோக்கி வழியாக விண்மீன்கள் மற்றும் கோள்களைப் பொதுமக்கள் பார்க்க வழிசெய்கின்றனர்.

புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

                                                                      



                            புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .

புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.


வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்


புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.

மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-
‘ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?”
தாய்க்குருவி சிரித்தது……

‘மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தேவையில்லை’

என்றது தாய்.

தாய்க்குருவி சொன்னது:-

‘வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்’
-ஈழத்து கவிஞர் காசியானந்தனின் கதை இது-
(புலிகளின் ஆத்மார்த்த கவிஞரும் இவரே ! இவரை கிழக்கின் பிறந்த ஒரு கவிஞராக மட்டுமே பார்க்கிறேன்)

அன்மைய புலம்பெயர் ஈழத்தவர் போராடங்களிலும் இந்திய தமிழர் போராடங்களிலும் கையாளப்படும் ஒரு வாசகம் இன அழிப்பு அல்லது இனச் சுத்திகரிப்பு என்பதாகும் புலிகளின் ஆதரவாளர்கள் பெரிதும் இந்த வாசகத்தை கையாள்வதை பார்க்கும் போது காசி அண்ணாவின் வரிகள்தான் என் ஞாபகத்திற்கு வருகின்றன


“வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்துவிட முடியாது”


எனவே எனது பேனாவை திறக்கின்றேன் கொஞ்சம் மையை சிந்த விட…..!


அன்மையில் தமிழ் உணர்வாளர் சீமான் தமிழ் நாட்டில் ஆற்றிய உரையில் தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக தாங்கள் நாடாத்தும் போராட்டங்களுக்கு இஸ்லாமியர்கள் ஆதரவு தரவில்லை என சாடியதோடு “முஸ்லீம்களை கொலை செய்தவன் கருணா அவனை தலைவர் விசாரைனைக்கு அழைத்தபோது சிங்களனோடுபோய் ஒட்டிக்கொண்டான்.! எங்கள் அண்ணனிடம்(பிரபாகரணிடம்) இம்ரான் பாண்டியன் என படையனியே உண்டுடா” என்று தனது கண்டுபிடிப்பை உணர்ச்சிவசப்படச் சொன்னார்


ஆகவே பாதிக்கப்பட்ட கிழக்கில் பிறந்த இஸ்லாமியர்கள் உலகங்கும் தூங்கிக் கொண்டிருக்கவில்லை என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும்..!

புலிகளின் தங்களுக்குள் வாழ்ந்த சொந்த இனத்தின் மீதான இனச் சுத்திகரிப்பையும் அது முழுமையாக வெற்றியளித்ததா என்பதை ஆய்வதே எனது நோக்கம்.

அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர் போராட்டம் மிகப் புனிதாமான தமிழ் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் ஏகபோக உரிமத்தை தனதாக அறிவித்துக் கொண்ட விடுதலைப் புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.


அப்படி வடக்கு-கிழக்குவாழ் சகோதர மக்கள் மீது புலிகள் என்ன செய்தார்கள் என்பதையும் அதன் பாதிபுகள் என்ன என்பதையும் சுருக்கமாகத் தருகின்றேன்.


1987ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டாம் திகதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை உடனடியாக றஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர்


ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டதுடன் அவர்கள் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டனர்.


முஸ்லிம் மக்களின் வீடுகள் ,வியாபார ஸ்தலங்கள் மற்றும் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் (கையில், காதில் மூக்கில், கழுத்தில் அணிந்திருந்த சிறு சிறு நகைகள் உட்பட) அனைத்துமே பயங்கரவாத விடுதலைப்புலிகளினால் கொள்ளையடிக்கப்பட்டன


இது குறித்து அண்மையில் யாழ்பாணத்தில் வாழ்ந்த யஹ்யா வாஸித் என்ற சகோதரர் இவ்வாறு எழுதியிருந்தார்.


“இன்றைய பல மாத வன்னிநகர்வையும், அன்றைய அந்த யாழ் வாழ் முஸ்லீம்களான எங்களது ஒரு நாள் நகர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.


வாப்பாவின் சைக்கிளில் மார்ட்டின் றோட்டிலுள்ள எனது தமிழ் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து விட்டு வீட்டுக்கு வருகின்றேன். மொத்தமுஸ்லீம்களும் றஹ்மானியா கொலோஜ், ஐந்து சந்தி, பள்ளிவாசலடி போன்ற இடங்களில் குழுமியிருந்தனர் (இதை உணர்ச்சி வசப்பட்டு வை.கோபால்சாமியின் பாணியில் சொல்வதானால் அங்கே மொத்த சோனியும் குய்யோ முறையோ என அலறிக் கொண்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்கள்) .


வாப்பா சொல்கின்றார் “மகன் நம்மள போகச் சொல்லி விட்டார்கள்”. யார் வாப்பா போகச் சொன்னது? ஏன் போகச் சொன்னார்கள்? எதற்காகப் போகச் சொன்னார்கள்? யாரும் யாரிடமும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை! கேட்க நேரமுமில்லை!! கேட்க நாதியுமில்லை!!


“எஸ் வீ ஓள் ஆர் பாஸ்ட்ரட்”. “திஸ் ஓடர் புறம் ஒன் மேன் ஆமி”………………………………………..”


அத்துடன் சாவகச்சேரி, கிளிநோச்சி, மன்னார் முஸ்லீம்கள் என அனைவரும் வட மாகாணத்தை விட்டு முற்றாக 1990 ம் ஆண்டு வெளியேற்றப் பட்டனர்.


இவ்வாறு மொத்தம் 75,000 முஸ்லீம்கள் எந்த நாதியுமற்றவர்களாக எதையும் செய்ய துப்பற்றவர்களாக அமைதியாக வெளியேறினார்கள்


புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றிவளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை



• 1985 ம் ஆண்டு மட்டகளப்பில் அமைந்திருந்த உன்னிச்சை என்ற கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் மக்கள் புலிகளுடன் சேர்ந்த செயற்பட்ட ஆயுத குழுக்களினால் வாழ்விடங்களை விட்டு விரட்டியடிக்கப் பட்டனர்.


1983 ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையின் சிங்கள காடையர்களால் தமிழ்பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அது எப்படி உலகெங்குமுள்ள தமிழர்களால் கருப்பு ஜுலையென நினைவு கூறப்படுகிறதோ அதேபோல் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையின் கிழக்குவாழ் முஸ்லீம்களின் கருப்பு ஆகஸ்டாக நினைவுகூறப்படுகிறது.



• 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் நாள் கிழக்கின் அக்கரைப்பற்று கிராமத்தில் 40 முஸ்லீம் தொழிலாளிகள் பின்னால் கைகளைக் கட்டி பின்தலையில் புலிகளால் சுடப்பட்டார்கள்.


• இரண்டாம்,மூன்றாம் திகதிகளில் மதவாச்சி மஜீட்புரத்தில் 15 மூஸ்லீம்கள் புலிகளால் படுகொலைச் செய்யப்பட்டார்கள்.

• மூன்றாம் திகதி காத்தான்குடி மீரா ஜும்மாப் பள்ளிவாயலில் இரவுத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது பள்ளிவாயலுக்குள் புகுந்த புலிகள் துப்பாக்கிச்சுடு நடத்தி 103 பேரைக் சுட்டுக் கொன்றனர்


• இதில் 25 பேர் சிறுவர்கள் அத்துடன் அதே நேரம் மற்றோரு பள்ளிவாயலான ஹுசைனியா தைக்காவில் இரவுத்தொழுகையில் இருந்த மக்களை கைக் குண்டு வீசிக் கொன்றனர் இதில் 37 முஸ்லீம்கள் தொழுது கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டனர்.


காத்தான்குடி ஏறாவூர் இனச் சுத்திகரிப்பானது புலிகளின் தலைவரின் ஆலோசனையின் பெயரில் புலிகளின் உளவுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மானின் நெறிப்படுத்தலில் அப்போதைய புலிகளின் கிழக்குப் தளபதிகளான ரஞ்சித், நியூட்டன், கரிகாலன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.


கரிகாலன் என்பவர் கிழக்கின் களஞவாஞ்சிக்குடியை சேர்ந்தவர் என்பதும் இவர் முஸ்லீம்களால் நன்றாக முஸ்லீம்களுக்கு எதிரி என அப்போது அறியப்பட்டவருமாவார்.


இது தோடர்பான விபரங்கள் Philp Reesயின் Dining with the terrorists என்ற நூலின் ஒரு பந்தியின் கானப்படுகிறது.


இந்த தாக்குதல் தொடர்பாக புலிகளின் உறுப்பினர் சீதா என்பவர் கூறுகையில் “தான் பள்ளிவாயலுக்குள் புகுந்து முப்பத்தி மூன்று தொழுகையில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளார்.


இந்த சீதா மட்டகளப்பு கோட்டமுனையைச் சேர்ந்தவர் இவர் அதன் பின் இந்திய அமைதிப் படையினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டபோது ஐரோப்பா தப்பிச் சென்றுவிட்டார்.



• ஒன்பதாம் திகதி புலிகளால் சியம்பலாகஸ்கந்தயில் வசித்த முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த புலிகள் புகுந்த போது இலங்கை இராணுவம் சுற்றி வளைக்கவே மக்களை விட்டுவிட்டு புலிகள் தப்பிச் சென்றனர்.


• பதினெட்டாம் திகதி கிழக்கில் ஏறாவுறில் அமைந்துள்ள சதாம் ஹூசைன் கிராமத்தில் நடுநிசியில் தூங்கிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை ஊருக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் கொன்றனர்


• இதில் 31 சிறார்கள், 27 தாய்மார்கள் 115 ஆண்களும் அடங்குவர்.


• இச் சம்பவத்தின்போது ஒரு கற்பிணித் தாயின் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருந்த குழந்தையை வெளியெடுத்து அதையும் வெட்டியதுடன் தாயின் வயிற்றில் அம்மிக் குழவியை வைத்திருந்தனர்.


புலிகளின் ஊது குழல்களே! சீமான் அவர்களே! இதுதான் சர்வதேச யுத்த விதிகளின் படி நீங்கள் நடத்திய விடுதலைப் போரா?


எந்த சர்வதேச யுத்த விதியில் ஆயுதம் எந்தாத அப்பாவி மக்களை கொல்வது அனுமதிக்கப் பட்டுள்ளதன நீங்கள் சொன்னால் நாங்கள் தெரிந்து கொள்வோம்!


• பதினாலாம் திகதி ஜூலை மாதம் கிழக்கில் உள்ள ஒன்தாச்சிமடம் என்ற இடத்தில் வைத்து புனித ஹஜ் கடமையை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஹாஜிகள் 69 பேரை புலிகள் கடத்தி கொலைசெய்தனர்.


• பத்தொன்பதாம் திகதி ஜுலை மாதம் கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையில் இருந்து காத்தான்குடிநோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்களை அம்பலாந்துரை என்ற இடத்தில் வைத்து கடத்தி அதில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லீம் ஆண் பெண்கள் அனைவரையும் தேனீரில் சைனட்டைக் கலந்து குடிக்குமாறு கொடுத்து புலிகள் கொலை செய்தனர்


• இதில் அவ்வருடம் ஹஜ் கடமையை நிறவேற்றித் திரும்பிய ஹாஜிகள், பெண்கள், குழந்தைகள் அடக்கம்


• மற்றும் இதே காலப்பகுதியில் கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுமாறு வேண்டிக் கொண்டதும் அதற்கு மறுத்த மக்கள் மீது பல முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதும் அந்த மக்களுக்கான போக்குவரத்தை தடைசெய்ததன் மூலம் பல நாட்கள் பட்டினியில் வாடவிட்டதுடன் ஊர்களை விட்டு வெளியேசெல்ல விடாமல் தடுக்கப்பட்டார்கள்.


இன்னும் சொல்வதானால் ! 1990ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் கிழக்கிலுள்ள முஸ்லீம்கள் முழுவீச்சில் புலிகளால் தங்கள் வாழ்விடங்களை விட்ட வெளியேற வேண்டும் என்பதற்காக தாக்கப்பட்டார்கள் எனலாம்.


• கிழக்கிலுள்ள சம்மாத்துரையில் ஜாரியா மஸ்ஜிதில் உற்கார்ந்திருந்த மக்கள் மீது புலிகளால் துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டது இதில் 05பேர் கொல்லப்பட்டு 03பேர் காயமந்தனர் இது 23ம் திகதி ஜுன் மாதம்

அதே மாதம் 29ம் திகதி ஓட்டமாவயில் ஆறு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் இதில் ஒட்டமாவடி ஹிஜார் மஸ்ஜிதின் தலைமை நம்பிக்கை பொறுப்பாளரும் அடக்கம்

இரண்டாம் திகதி ஜுலை மாதம் அக்கரைப்பற்றில் பதினான்கு இஸ்லாமிய விபசாயிகள் புலிகளால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்


12ம் திகதி ஆகஸட் மாதம் நெற்காணிகளில் வேலை செய்து கொண்டிருந்த முஸ்லீம் விபசாயிகள் நால்வர் சம்மாந்துரையில் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்


ஆகஸ்ட் மாதம் இன்னும் எட்டு முஸ்லீம்கள் அக்கரைப்பற்று டவுனில் வைத்து புலிகளால் சுடப்பட்டனர்.


இவ்வாறு புலிகளின் இன சுத்திகரிப்பு பற்றி எழுதிக் கொண்டே போகலாம்….


• ஏப்ரல் மாதம் 1992ம் ஆண்டு பொலநறுவையில் அமைந்துள்ள எல்லைக் கிராமமான அழிஞ்சிப்பொத்தானையில் வசித்துவந்த 69 மூஸ்லீம் மக்களை கொலை செய்யப்பட்டனர்.


• 15ம் திகதி ஏப்ரல் மாதம் 1992ம் ஆண்டு பொலநறுவையின் எல்லைக் கிராமங்களான பள்ளியகோடல, அக்பர் புரம், அகமட் புரம், பங்குரான ஆகிய கிராமங்களில் வாழ்ந்த விவசாயிகளான மூஸ்லீம் மக்கள் 187 பேரைக் கொலைசெய்தனர் இதில் கற்பினித் தாய்மார்கள் உள்ளடக்கம்.


இந்த தாக்குதல் தொடர்பான செய்தியை அவுஸ்ரேலியாவில் வெளிவரும் முஸ்லீம் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை தனது முதல் பக்கத்தில் 30திகதி ஒக்டோபர் மாதம் 1992 ஆண்டு பிரசுரித்தது.


• மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லீம்களின் பூர்விகச் சொத்தான வயல் நிலங்கள் பறிக்கப்பட்டதும் கிழக்கு மாகாண முஸ்லீம்களின் பொருளாதாரம் திட்டமிடப்பட்டு முடக்கப்பட்டதும் வழைச்சேனை, மட்டக்களப்பு, காத்தான்குடி, கல்முனை மற்றும் பல ஊர்களில் உள்ள முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் உடைத்து கொள்ளையிடப்பட்டதுடன் தீவைத்து எரிக்கப்பட்டதும்.


இவ்வாறு பல வழிகளில் தன்னுடன் சகோதரர்களாக வாழும் சக மக்களை இனச் சுத்திகரிப்பு செய்ய முனைந்து வடக்கைபோல கிழக்கையும் கைப்பற்ற புலிகள் பிராயத்தனம் எடுத்தனர்


அது தோல்வியை தழுவிக் கொள்ளவே முஸ்லீம்களின் அரசியல் எழுச்சியை தடுக்க தங்களால் ஆன முழுப்பலத்தையும் பிரயோகித்தனர் ஆயுதப்போராட்டத்தில் நம்பிகையில்லாத இலங்கை முஸ்லீம்கள் மீதும் அவர்களின் அரசியல் தலைவர்கள் மீதும் பல தாக்குதல்களை மேற்கொண்டனர்


இதில் பல தலைவர்களை, சமூக சேவையாளர்களை, சிந்தனை வாதிகளை முஸ்லீம்கள் இழந்தனர் இதில் முஸ்லீம்களுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்த்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகரும் தலைவரும் இலங்கை முஸ்லீம்களின் தேசிய தலைவருமான மர்ஹும் ஏம்.எச்.எம். அஸ்ரப் அவர்ளின் இழப்பே.


அரசியல்துரை, கல்வித்துரை ரீதியாக முஸ்லீம்களின் வளர்சியையும் அகிம்சை வழியில் அரசியல் ரீதியாக போராடி தங்களது உரிமைகளை கௌரவமாக பெற்று முஸ்லீம்கள் முன்னேறுவதை புலிகளின் தலைமைகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை


தங்களின் ஏக பிரதிநிதி வாதம் சக தமிழ் பேசும் மக்களாள் ஏற்றுக் கொள்ளப் படாததையும் புலிகளின் தந்தோராபாய நகர்வுகள் பயமுறுத்தல்கள் தொடர் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களுக்கு முஸ்லீம்கள் அடிபணிய மறுத்தது புலித் தலைமை பீடத்தால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது


எனவே முஸ்லீம் சமூகத்தின் தலைமையை ஒழிக்க முடிவெடுத்து காய்கள் புலிகளின் தலைமையால் நகர்தப்பட்டு இலங்கை முஸ்லீம்களின் தன்னிகரில்லா தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக அம்பாறை மாவட்டத்திற்கு ஹெலிக்கப்டர் மூலம் செல்லும் போது அவருடம் பத்திரிகையாளர் என்ற பெயரில் சென்ற தற்கொலையாளி மூலம் நடு வானில் குண்டை வெடிக்கவைத்து முஸ்லீம்களின் தலைமை அழிக்கப்பட்டது.


இதன் மூலம் கிழக்கில் மிகப் பலமான முஸ்லீம் சமூகத்தை அடக்கி அடிபணிய வைக்க வேண்டும் என்பதுடன் உடற் பிறப்புக்களாக வாழும் தமிழ், முஸ்லிம் உறவையும் சீர் குலைத்து ஏக பிரதிநிதியாக மாற பிரபாகரன் பகல் கனவு கண்டார்.


பாரத பிரதமரின் கொலையை புலிகள் நேரடியாக ஏற்காதது போலவே இதையும் அவர்கள் ஏற்கவில்லை என்றாலும் அந்த தற்கொலையாளியை மாவீர்ர் அந்தஸ்து வழங்கி பின்னாலில் கௌரவித்ததன் மூலம் அதை புலிகள் ஏற்றுக் கொண்டனர்.


இது போல புலிகள் சக இன மக்கள் மீதும் தங்கள் இனத்தில் புலிகளை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்கும் இழைத்த கொடுமைகள் எழுதில் வடிக்க முடியாதவை விரிவு கருதி அவற்றை நான் தொட வில்லை.


இன்னும் தாயகத்தில் வட கிழக்கு மண்னில் பூர்விகமாக வாழ்ந்த சிங்கள மக்கள் இப்போது எங்கே? அவர்களை புலிகள் ஏற்றுக் கொண்டு சமமாக வாழ சந்தர்பம் அளித்தார்களா? அல்லது இன சுத்திகரிப்பு செய்தார்களா?


1990ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள மக்கள் வாழ்ந்த கிராமங்களான தாந்தாமலை,வெளிஓயா, பதவியா ஆகிய இடங்களில் வாழ்ந்த சிங்கள் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் மிகுதி மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டப் பட்டனர்.


அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாள் கோனகல என்ற இடத்தில் வாழ்ந்த 52 சிங்கள மக்கள் புலிகளால் கொல்லப்பட்டனர் இதில் அதிகமாக மிகச் சிறிய வயதான குழந்தைகளும் அடங்குவர்.


கிழக்கில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களில் மிகவும் மோசமானது இரண்டாம் திகதி ஜுன் மாதம் 1987ல் அம்பாறை மாவட்டத்திலுள்ள அறுந்தலாவ எனும் இடத்தில் புத்த பிக்குகளாக பயின்று கொண்டிருந்த 7 முதல் 13 வயதையொத்த புத்த துறவி சிறார்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலாகும் இதில் 33 புத்த துறவி சிறார்கள் மற்றும் அவர்களின் குருவும் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டனர்.


1982 ஆண்டு ஆயுத போராட்டத்தை ஆரம்பித்த புலிகள் 1990 ஆண்டு காலப்பகுதியை சிறுபான்மையில் மற்தொரு தனிப்பட்ட கலாச்சார விழுமியங்களை கொண்ட இனமான முஸ்லீம் மக்களை அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் தமிழ் ஈழ மண்ணிலிருந்து இன அழிப்புச்செய்து ஒழித்துவிடவே பெரும் தாக்குதல்களைத் தொடுத்தனர்


அத்துடன் ஈழத்தில் பரம்பரையாக வாழ்ந்துவந்த சிங்கள பாமர மக்களையும் இனச் சுத்திகரிப்பு செய்தனர் இதில் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் ஒரளவு வெற்றியளித்தாலும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் படுதோல்வியை அளித்தது மட்டுமல்லாது புலிகளை சர்வதேசப் பயங்கரவாதிகள் என்ற புனிதமான இடத்துக்கு கொண்டு சென்றது என்பதே உண்மை.


இதற்குக் காரணம் முஸ்லீம்கள் அரசியல் ரீதியான போராட்ங்களை தங்களுக்குள் முன்னெடுத்து தங்கள் நிலையை உலக அரங்கிக்கு அமைதியாய் கொண்டு சென்றதாகும்.


இவற்றையெல்லாம் புலிகளின் ஊதுகுழல்களால் மறுக்க முடியுமா?


அல்லது சர்வதேசத்திடம் பதியப் பட்டுள்ள இச் சம்பவங்களை அழிக்கத்தான் முடியுமா?


சீமான் அண்ணா? இவைகள் புலிகளின் தலைவரான உங்களின் அண்ணனால் செய்யப்படவில்லை என்றால்!! ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..


சீமான் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் சகோதரர்களே…!

இனச் சுத்திகரிப்பு என் பொருள்படும் சொல்லை நீங்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரயோகிக்க உங்களுக்கோ அல்லது புலிகளுக்கோ தகுதியிருக்கிறதா?

இதுரை காலமும் புலிகள் தங்களுடன் வாழ்ந்த மக்கள் மீது செய்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் யாருக்கும் தெரியாதா?

ஆகவே! புலிகளுக்கு ஆதரவாக் கோசம் போடாமல் யுத்ததிற்குள் சிக்குண்டு தவிக்கும் எம் மக்களுக்காக் கோசம் போடுங்கள் நாங்களும் உங்களுடன் இருப்போம்!

புலி ஆதரவுக் கோசங்களை யாரும் கணக்கெடுக்கப் போவதில்லை!

சீக்கியர்களின் பொற்கோயில் மீதான இந்திய இரானுவத்தின் தாக்குதலை சீக்கியர்கள் எவ்வாறு மன்னிக்க வில்லையோ .!

ஈழத்தில் இந்தியப் படையினரின் தாக்குதலை நீங்கள் எவ்வாறு மன்னிக்க வில்லையோ…!


இந்தியா! பிரதமர் ராஜிவ் காந்தி மீதான புலிகளின் தாக்குதலை எவ்வாறு மன்னிக்கவில்லையோ..!


அதே போன்றே……..! உலக வாழ் முஸ்லீம்களும் புலிகள் இலங்கை வாழ் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு தாக்குதல்களை மன்னிக்க மாட்டார்கள்…. என்பதுடன்


புலிகளை எந்தக் காலத்திலும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் தங்களது ஒரு பிரதிநிதியாக்க் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உலகத்திற்கு தெரியும்.


மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும் விறகு வெட்டிக்குப்பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தன.

காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்து போனது.

இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது – ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?” என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.


‘மரங்கொத்தியால் அது முடியாது” என்றது கயிறு.


‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?”


கயிறு சொன்னது:-

‘நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் விழுத்துவதில்லை”



SOURCE: kizhakkan

Adam M Adam-facebook


வியாழன், 21 ஜூன், 2012

இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே. ஏன்?.



டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் முஸ்லிம் அல்லாதவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன். படியுங்கள். பரப்புங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவான்

பதில்:

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது
உண்மை. அடியிற் காணும் விளக்கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:
1. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.
நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட
பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் - மற்றும்
ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற
பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு. இதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் -
அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில
இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் - உலகத்தில் உள்ள மக்களுக்கும்
பொதுவான மார்க்கமாக இருந்தாலும் - இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது -
இரண்டு புனித நகரங்களான மக்காவும் - மதினாவுமாகும். இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட
பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல
அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன்
எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின்
பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும்
மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது
அல்ல.

2. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் ''விஷா'

ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக ''விஷா' அதாவது
அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில்,
தமக்கென வித்தியாசமான சட்டங்களையும், விதிகளையும், தேவைகளையும் வகுத்துள்ளன.
மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் - விதிகளுக்கும், தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு
தம் நாட்டிற்குள் வர அனுமதி அளிப்பதில்லை.

இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி அளிப்பதில் கடுமையான சட்டங்களையும், விதிகளையும்,
தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில்
உள்ள மக்களுக்கு அனுமதி அளிப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வகுத்துள்ளது.
மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான
தேவைகளையும் - நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது, போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண
தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல
வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை
காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு
உட்படுவேன் என்றால் மாத்திரமே, என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த
மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் - தன் உதடுகளால்
மொழிந்து, உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய

''லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்'
'வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.
முஹம்மது நபி அவனது தூதராவார்' - என்பதுதான்.

தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் செய்ததா? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.






http://www.tehelka.com/channels/news/2008/Aug/16/images/jullah.jpg 
தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக தற்காலிகமாக நியமனம் செய்த மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம இல்லை என்று முதலில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீனும் அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களும் அறிக்கை வெளியி்ட்டனர். இவர்களை அடிபிசகாமல் பின்பற்றி சமுதாயத்தில் பொய்யை மூலதனமாக கொண்டு இயங்கும் ஒரு தறுதலை அமைப்பு போராட்டம் கூட நடத்தியது. தமிழக அரசு சமீபத்தில் நியமனம் செய்த தற்காலிக மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது உண்மை தானா என்பதை ஆய்வுச் செய்தோம்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் உச்சபட்ச நிலையில் இருந்த நிலையில் கத்தாரில் இருந்த நானும் அ. அஸ்லம் பாஷாவும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்ட போது அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட துறையிடம் விசாரித்து வந்ததும் தகவல் தருவதாக கூறினார். இதன் பிறகு அமைச்சரே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமிழக அரசின் மருத்துவத் துறைக்கு 10A 1 விதிமுறையின் படி ஜனவரி 20 முதல் மார்ச் 27 வரை 688 மருத்துவர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டதாகவும் இதில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 24 மருத்துவர்களும் திறந்த போட்டியில் (Open Competition) 28 மருத்துவர்களும் நியமனம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இது குறித்து எழுத்துபூர்வமாக தகவல் அளிக்கும் படி கேட்டுக் கொண்டோம். புதுக்கோட்டையிலிருந்து சென்னை திரும்பியவுடன் தகவல் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.


மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சென்னை திரும்பிய பிறகு அவரை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது மற்றும் கல்வி வழிகாட்டித் துறையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.எப். கான் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமைச்சர் 688 மருத்துவர்களில் 52 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்ட பட்டியலை வழங்கினார். அமைச்சர் அளித்த பட்டியலை நாம் ஆய்வுச் செய்ததுடன் மருத்துவர் நியமன வாரியத்தின் அதிகாரிகளுடன் பேராசிரியர் எம்.எப். கானும், மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் திருவள்ளுர் இஸ்மாயிலும் விளக்கம் கேட்டனர். பேராசிரியர் காதர் மைதீனும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் இவர்கள் வெளியிட்ட அறிக்கையை நம்பி ஆய்வுச் செய்யாமல் முற்றுகை போராட்டம் அறிவித்த ஜைனுல் ஆபிதீனும் விவரம் என்னவென்று அறியாமல் விசாரணை எதுவும் செய்யாமல் செயல்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிந்தது.


மக்கள் நல்வாழ்வு துறையின் இணையத் தளத்தில் தற்காலிக மருத்துவர் நியமனத்திற்காக மார்ச் 26 மற்றும் 27ல் கலந்தாலோசனைக்கு (counselling) தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 1384 மருத்துவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. ஆனால் இது நியமனம் பெற்றவர்களின் ப்ட்டியல் இல்லை. கலந்தாய்விற்கான பட்டியல் தான். இந்த பட்டியல் பல்வேறு கட்டங்களாக ஜனவரி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த கலந்தாய்வில் கடைசி 2 கட்டங்களுக்கான கலந்தாய்விற்காக அழைக்கப்பட்டவர்களின் பட்டியல். அப்போது ஏன் முஸ்லிம்கள் ஒருவர் கூட இந்த பட்டியலில் இல்லை என்றால் இந்த கடைசி 2 கட்ட கலந்தாய்வுக்கு முன்பாகவே முஸ்லிம் மருத்துவர்கள் 52 பேர் நாம் முன்பே குறிப்பிட்டது போல் நியமனம் செய்யப்பட்டு விட்டார்கள. இப்படி நாம் சொல்லும் போது இந்த 1384ல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லையா என்ற கேள்வி எழும். இந்த 1384 பேரையும் சேர்த்து கலந்தாய்வுக்காக 5856 மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள். இவர்களில் 1963 மருத்துவர்கள் மட்டுமே 2012 ஜனவரி 20, 21, 22. 23 மற்றும் மார்ச் 22, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்குக் கொண்டார்கள். இவர்களில் கலந்தாய்வுக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 835 இடங்களுக்கு 688 பேர் நியமனம் செய்யப்பட்டார்கள் என்பதை மருத்துவத் துறை நமக்கு விரிவாக பட்டியலை அளித்துள்ளது. அந்த பட்டியலின் சுருக்கும் இதோ


688 மருத்துவர்களில் திறந்த போட்டியில் 28 பேர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பேர் ஆக மொத்தம் 52 முஸ்லிம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விபரம் வருமாறு


1. சமீமா 2. சைய்யது அப்துல் காதர் 3. அஹ்மது ஷேக் 4.ஜின்னா 5. எஸ்.எம். இம்தியாஸ் 6.எஸ. நர்கீஸ் 7. எஸ். சையது பாகர் 8.ஆர். மன்சூரா சாஹிபா 9. ஏ. உஸ்மான் 10.முஹம்மது மீரான் 11. ஏ. கதீஜா சமீஹா 12. பி. சமீமா 13. ஏ. அர்ஷியா தபசும் 14.ஏ. ஆரிப் உதுமான் முகைதீன் 15. எம் ஆசிக் அல் முஹம்மது 16.நிலோபர் நிஷா 17.எஸ். அலிமா பானு 18.ஏ. அஸ்கர் அலி 19.பி. சாகுல் ஹமீத 20.எம். சபீனா 21.ஏ. மரிஜியா 22.ஷேக் முஹம்மது ராஜா 23. ஏ. சலீம் 24. ஆர். முஹம்மது ஹில்மி 25. சைய்யது அப்துல்லா முஹம்மது அமீன் 26. சைய்யது நிஷான் பாத்திமா 27. பி.ஐ. சாஜித் அலி 28.எம். பைரோஸ் 29.எம. முஹம்மது இப்ராஹீம் 30.எம.ஜி. ஷாஹித் அப்துல்லா 31. சாஜிதா நஸ்ரின் 32.அஜ்மல் கான் 33. ரியாஸ் சுல்தானா 34. எப். முஹம்மது ரபி 35.எஸ். பகிருத்தீன் ஆரிப் கான் 36. எ. அபுல் ஹசன் 37. முனவர் அலி மித்ஹத் ஹப்சா 38.எம். மஜிதா பேகம் 39. டி.ஏ. ரிஸ்வான் அஹ்மது 40.ஹெச். சாஜிதா பர்வீன் 41. எ. நசுரீன் 42.எஸ். தய்யுபா பாத்திமா 43. ஜே.ஏ.எம்.சையத் இப்ராஹீம் ஷா 44.எஸ்.ஐ. சாஹித் அக்பர் 45.ஆர். பர்கத் 46. கே. ரியாஸ் பாத்திமா 47.ஏ. சுல்தான ராஜா 48. ஏ. ஆசிபா பேகம் 49. ஏ. பர்கத் நிஷா 50. எ. அப்துல் ரஹீம் 51. எல். சப்னம் 52. அஹ்மது பாசில்


ஜனவரி 2 2012ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எம்.எஸ். 2ன் படி 835 மருத்துவர்கள் நியமனம் செய்யயப்பட வேண்டும். இதில் மேற்கண்டவாறு 688 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 147 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு எவ்வாறு பின்பற்றப்படுகின்றது என்பதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறற்றக் கழகம் தொடர்ந்து கண்காணித்து வரும். இதில் துரோகம் இழைக்க அனுமதிக்க மாட்டோம். ஆனால் ஆய்வுச் செய்யாமல் மலிவான விளம்பரத்தில் ஈடுபட மாட்டோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.
-
www.tmmk.in

சொரியாசிஸை (psoriasis)குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்!!!






              உலகிலேயே தோல் நோய்கள் அதிகம் வருவதில், முதலில் இருப்பது சொரியாசிஸ் தான். இது மரபு காரணமாக ஏற்படுகிறது. மேலும் இது வந்தால் தோலானது திட்டு திட்டாக வரும். இந்த திட்டு ஏற்பட்ட இடமானது தடிமனாக, வறட்சியுடன் இருக்கும். இந்த சொரியாசிஸ் விரைவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவும் தன்மையுடையது. அதற்காக இது தொற்றுநோய் அல்ல. மேலும் இது வந்த இடத்தை சுற்றி சிவப்பு நிறத்துடன் இருப்பதோடு, வறண்டும் காணப்படும். இந்த சொரியாசிஸை உடனே முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் இதற்கு தினமும் மருந்து எடுத்துக் கொள்வதால் சரிசெய்யலாம். மேலும் இதனை இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். அதற்கு வேப்ப எண்ணெய் தான் சிறந்த மருத்துவ பொருள்.

சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...

1. தோல் நோய்கள் பொதுவாக அதிகம் வருவதற்கு அடிப்படையாக இருப்பது சருமமானது வறட்சி அடைவது தான். இத்தகையதற்கு சிறந்தது தான் வேப்ப எண்ணெய். இதை தடவினால் சருமமானது வறட்சியை அடையாமல், எண்ணெய் பசையுடன் இருக்கும்.

2. வேப்ப எண்ணெய் தடவுவதால் எரிச்சல், அரிப்பு மற்றும் சருமம் சிவப்பு நிறத்தை அடைதல் போன்றவை குணமாகிறது. மேலும் இதில் உள்ள மருத்துவ குணம் சருமத்தில் திட்டு திட்டாக தோலானது வருவதை சரி செய்கிறது.

3. மேலும் இது தோல்களில் எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, தோலில் இருக்கும் திசுக்களுக்கு வலுவை கொடுத்து, சருமத்தை பாதுகாக்கிறது.

4. இந்த எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், இது தோலில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து, சருமத்தில் தொற்றுநோய் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.

சொரியாசிஸை தடுக்கும் 4 வழிகள்...

1. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை குணப்படுத்தலாம்.

2. இரவில் எண்ணெய் தடவி சுத்தம் செய்த பின், சொரியாசிஸ் வந்த பகுதியை அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் காண்பிக்க வேண்டும். இதனால் சருமமானது உடலுக்கு தேவையான வைட்டமின் டி-யை உறிஞ்சிக் கொண்டு, சரிசெய்கிறது.

3. எங்கு வெளியே சென்றாலும் பாதிக்கப்பட்ட பகுதியை துணியால் மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியை அழுக்கு மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கலாம்.

4. மேலும் மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பகுதியில் வைப்பதன் மூலமும் சரிசெய்யலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் இதில் உள்ள கிருமியை அழித்து விரைவில் குணப்படுத்தும்.
-Udhai Kumar

புதன், 20 ஜூன், 2012

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத் தேர்தலில் இயக்குனர் அமீர் வெற்றி

 


இன்று நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத் தேர்தலில் இயக்குனர் அமீர் வெற்றி பெற்று, தலைவர் பதவிக்குத் தேர்வானார்.
பெப்சி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கத் தேர்தல், வட பழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தலில், திரைப்பட தொழிலாளர் தலைவர் வேட்பாளராக இயக்குனர் விசு, இயக்குனர் அமீர் போட்டியிட்டனர். இதில் 37 வாக்குகள் பெற்று அமீர் வெற்றிபெற்றார். இயக்குனர் விசு 28 வாக்குகள் பெற்றார்.
       
இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது வாக்குரிமையை கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இதனால் சர்ச்சை எழவே, தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களிடம் கருத்து கேட்டபோது, அதைக் கணக்கில் கொள்ள வேண்டாம் என்று இருதரப்பினரும் கூற, பாரதி ராஜாவின் வாக்குக் கடிதம் எண்ணிக்கையில் சேர்க்கப் படவில்லை. இந்நிலையில், அமீர் வெற்றிபெற்றார்.
     
"திரைப்படத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாமல்தான் தலைவர் தேர்தலுக்கு நின்றேன். இனி அந்த அவலம் நடக்காது. அதோடு, தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதியத் திட்டத்தை அமுல் படுத்துவதும் இனி என் முழுமூச்சாக இருக்கும் அடுத்தடுத்து சங்கத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவேன்" என்றார் வெற்றிபெற்ற அமீர்.

அணு உலை என்ன? அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் தயாரிப்போம்..: ஈரான் அதிரடி. அதிர்ச்சியில் அமரிக்கா.

 
 டெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக குற்றம்சாட்டி அந்நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடையை விதித்திருக்கும் நிலையில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அந்நாடு தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் அணு ஆயுதத்தால் அலறிப் போய் இருக்கும் இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் என்ற நிலை இருந்தது. இஸ்ரேலின் கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காதான் தடுத்து பொருளாதாரத் தடை விதித்தது. பின்னர் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஈரான் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஈரானிடம் தற்போது 23 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவற்றுடன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை சேர்ப்பதற்காக அணுசக்தி என்ஜினை உருவாக்க உள்ளனர்.

இதுதொடர்பாக கடற்படை தளபதி அப்பாஸ் சாமினி கூறும்போது, ஈரான் அணுசக்தியை ஆக்கபூர்வ பணிக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். மின் உற்பத்தி, விவசாயம், மருந்து தயாரிப்பு போன்றவற்றுக்கு மட்டும் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் என்ஜினை தயாரிக்க உள்ளோம். இது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். 18 ஆயிரம் 750 டன் எடை கொண்ட கப்பலை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும். என்றார்.

ஈரானின் இந்த முயற்சியால் அமெரிக்கா கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது இஸ்ரேலோ சீற்றத்தின் உச்சத்தில் இருக்கிறது.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

 


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல

மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . 

உலகின் மிக அசாதாரண தனித்துவமான கட்டிடங்கள் (புகைப்படங்கள்)


உலகில் பல நாடுகளில் மனிதனால் உருவாக்கப்பட்ட சில அசாதரண கட்டிடங்கள்தான் இவை.
வினோதமாக இக் கட்டிடங்கள் காட்சியளித்தாலும் இவைகளை உருவாக்கியவர்களின் கற்பனை திறனுக்கு ஓர் தனி சக்தி இருப்பதை உணரமுடிகிறது.

தேசிய மீன் வளர்ச்சி வாரியத்தால்(NFDB) மீன் வடிவில் அமைக்கப்பட்ட இக் கட்டிடம் ஹைதெராபாத்தில் அமைந்துள்ளது.
'Crazy House' (Verrueckte Haus) என அழைக்கப்படும் இக் கட்டிடம் ஜெர்மனியில் அமைந்துள்ளது.
வித்தியாசமான இந்த ஸ்பா விடுதி ஸ்பெயினில் அமைந்துள்ளது.

உலகின் தலைகீழாக அமைக்கப்பட்ட கட்டிடங்களில் மூன்றாவது நிலையில் இருக்கும் 'Caracella Club' எனும் இக்கட்டிடம் புதுடில்லியில் உள்ளது.

CCTV செய்தி நிறுவனத்தின் தலைமையகமான இக்கட்டிடம் சீனாவில் உள்ளது.

புகழ்பெற்ற அருங்காட்சி மையமாக திகழும் இக்கட்டிடம் Niteroi வில் அமைந்துள்ளது.

வால்ட் டிஸ்னியின் நிகழ்ச்சி அரங்கமாக உருவாக்கப்பட்ட இக்கட்டிடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது.

பிரமாண்ட திரையரங்கமாகன இக் கட்டிடம் பீஜிங்கில் உள்ளது.

கேம்பிரிட்ஜின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான இக் கட்டிடம் அமெரிக்காவில் உள்ளது.

Agora என அழைக்கப்படும் இக் கட்டிடம் ஸ்பைன் Valencia நகரில் அமைந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் இருபத்தெழு மாடி அடுக்குகள் கொண்ட இக் குடியிறுப்புக் கட்டிடம் மும்பையில் அமைந்துள்ளது.
76 மாடி அடுக்குகள் கொண்ட இக் குடியிருப்புக் கட்டிடம் நியூயோர்க்கில் உள்ளது.

திங்கள், 18 ஜூன், 2012

ரூ.200 கோடி நில மோசடி புகார்: தமிழக ஆளுநர் ரோசையா நேரில் ஆஜராக ஆந்திரா நீதிமன்றம் சம்மன்




ரூ.200 கோடி நில மோசடி புகார்: தமிழக ஆளுநர் ரோசையா நேரில் ஆஜராக ஆந்திரா நீதிமன்றம் சம்மன் 
ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது அமீர்கான் பேட்டை. இங்குள்ள 9.14 ஏக்கர் அரசு நிலத்தை ரோசையா ஆந்திர முதல்வராக இருந்தபோது தனக்கு நெருக்கமான நண்பர்கள் 13 பேருக்கு மலிவு விலையில் ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது.
 
இதையடுத்து வக்கீல் மோகன்லால் என்பவர் ஐதராபாத் கோர்ட்டில், நில ஒதுக்கீடு செய்ததில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ரோசையா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார்.  
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரோசையா மற்றும் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.  
 
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரோசையா மற்றும் விஜயகுமாரி, சாயிரெட்டி, ஷிகானி, மாதுரி உள்பட 13 பேர் மீது 404, 405, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் ரோசையா கடந்த வருடம் செப்டம்பர் 9-ந் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார். இருப்பினும், இவ்வழக்கு விசாரணை ஆந்திரா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 2-ந் தேதி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு ரோசையாவிற்கு ஆந்திரா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

-maalaimalar.com

















சபாஷ் செய்னா * இந்தோனேஷிய ஓபனில் 3வது முறையாக சாம்பியன்

  

ஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில், இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் செய்னா நேவல், சீனாவின் லி ஜுவருயை எதிர்கொண்டார். முதல் செட்டை 13-21 என கோட்டைவிட்ட செய்னா, இரண்டாவது செட்டை 22-20 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் தொடர்ந்து அசத்திய செய்னா, 21-19 என தன்வசப்படுத்தினார். இறுதியில் செய்னா 13-21, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். எல்லாமே மூன்று:
இது, இந்தோனேஷிய ஓபனில் செய்னாவின் மூன்றாவது பட்டம். முன்னதாக 2009 மற்றும் 2010ல் அடுத்தடுத்து பட்டம் வென்ற இவர், கடந்த ஆண்டு பைனல் வரை முன்னேறினார். பைனலில் சீன வீராங்கனை வாங் இகானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து இரண்டாவது இடம் பிடித்தார்.
* இந்தோனேஷிய ஓபன் ஒற்றையர் பிரிவில் அதிக முறை பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் இந்தோனேஷியாவின் சுசி சுசான்டி (5 முறை, 1991, 94-97), சீனாவின் லி லிங்வேய் (4 முறை, 1984-85, 87-88) ஆகியோர் உள்ளனர்.
* தவிர இது இந்த ஆண்டு செய்னா கைப்பற்றிய மூன்றாவது பட்டம். முன்னதாக கடந்த மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தில் நடந்த சுவிஸ் ஓபன் மற்றும் கடந்த வாரம் பாங்காக்கில் நடந்த தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் பட்டம் வென்றார். 
லண்டன் ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் செய்னாவின் அடுத்தடுத்த வெற்றி, பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து செய்னா கூறுகையில், ""இந்தோனேஷிய ஓபனில் மூன்றாவது முறையாக பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எளிதான காரியமல்ல. இம்முறை ஒவ்வொரு போட்டியும் சவால் நிறைந்ததாக இருந்தது. இங்குள்ள ரசிகர்களின் ஆதரவு வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தது,'' என்றார்.
சிறந்த வெற்றி: கோபிசந்த்
செய்னாவின் வெற்றி குறித்து பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், ""அடுத்தடுத்து இரண்டு மிகப் பெரிய தொடரில் செய்னாவுக்கு கிடைத்த வெற்றி எளிதானதல்ல. இதற்காக இவர் நிறைய போராடி உள்ளார். ஒவ்வொரு போட்டியும் கடினமாக இருந்ததால், இக்கட்டான நேரத்தில் மிகவும் நேர்த்தியாக விளையாடினார். கடந்த வாரம் தாய்லாந்தில் விளையாடிய பின், மிகக் குறுகிய இடைவேளையில் ஓய்வு எதுவுமின்றி இந்தோனேஷிய ஓபனில் சாதித்திருப்பது பாராட்டுக்குரியது. இது, லண்டன் ஒலிம்பிக்கில் சாதிப்போம் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது,'' என்றார்.
பாராட்டு மழை
இந்தோனேஷிய ஓபனில் பட்டம் வென்று சாதித்த, இந்திய வீராங்கனை செய்னாவுக்கு பாராட்டு மழை குவிகிறது.
இந்திய பாட்மின்டன் சங்கத்தின் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா கூறுகையில், ""இந்தோனேஷிய ஓபனில் பட்டம் வென்ற செய்னாவுக்கு வாழ்த்துக்கள். இவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்து உதவி வரும் பயிற்சியாளர் கோபிசந்துக்கும் பாராட்டுகள். இதன்மூலம் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் பெருமை தேடித்தந்துள்ளனர்,'' என்றார்.
செய்னாவுக்கு, இந்திய பாட்மின்டன் சங்கத்தின் செயலாளர் விஜய் சின்கா, ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 
-dinamalar.com


காந்திக்கு தேசத்தந்தை பட்டம் சூட்டியது யார்? சிறுமியின் கேள்விக்கு திணறிய மத்திய அரசு

ஐஸ்வர்யா

எந்தப் பெயருக்கும் செயலுக்கும் ஒரு காரணம் இருந்தே தீரும். ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. இது திரைப்படப் பாடல் மட்டுமல்ல, நிகழ்கால வாழ்வின் நிதர்சன உண்மையும் அதுவே. கேள்விகள் கேட்கப்படுவதால்தான் தகுந்த பதில்கள், சால்ஜாப்பு பதில்கள், சவடால் பதில்கள், சமாளிப்பு பதில்கள், தருக்குப் பதில்கள், கிறுக்குப் பதில்கள் என பல்வேறு விதமான பதில்களைக் கேட்டு மனிதர்களின் தரம், தன்மை குறித்த மதிப்பீடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.
வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ், பொருளியலின் தந்தை ஆடம் ஸ்மித், மருத்துவ இயலின் தந்தை ஹிப்போ கிரடிஸ், இதுபோன்ற பல்வேறு துறைகளுக்கும் தந்தை யார்? என்று கேள்வி கேட்கப்பட்டு மேற்குறிப் பிடப்பட்டவர்கள் எல்லாம் அத்துறைகளில் சாதனைப் படைத்தவர்களாக இருந்ததனாலும் முன்னோடிகளாக விளங்கியதாலும் அத்துறைகளின் தந்தை என துறைசார்ந்த நிபுணர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சில கேள்விகளைக் கேட்கும்போது சுவாரசியமான, அதிர்ச்சி விடைகள் கிடைக்கும். அதுபோன்ற ஒரு கேள்வியைத்தான் லக்னோவைச் சேர்ந்த சிறுமி ஐஸ்வர்யா என்ற 6வது வகுப்பு படிக்கும் மாணவி கேட்டார்.
கேட்பதற்கு எளிதானக் கேள்விபோல் தோன்றலாம். இந்தியப் பிரதமர் அலுவலகமும் உள்துறை அமைச்சக அலுவலகமும், இந்திய தேசிய ஆவணக் காப்பகமும் திக்கித் திணறி மயங்கி, கிறங்கி, விட்டால் போதும் என ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு அப்படி என்னதான் கேள்வி கேட்டாள் அந்த பச்சிளம் சிறுமி. 1) காந்தி தேசத்தந்தை ஆனது எப்போது? 2) காந்திக்கு தேசத்தந்தை எனப் பெயர் சூட்டியது யார்? இந்த இரண்டு கேள்விகளைத்தான் மாணவி ஐஸ்வர்யா கேட்டாள்.
காந்தி பாசத்தந்தை ஆனக் கதை அவரது மூத்த மகன் பிறந்தபொழுது. ஆனால் தேசத்தந்தை ஆன கதை யாருக்கும் தெரியவில்லை என்பது தான் கொஞ்சம் சுவாரசியமான சோகம். இதே கேள்வியை மாணவி ஐஸ்வர்யா முதலில் தனது பள்ளிக்கூட ஆசிரியையிடம்தான் கேட்டாள். பாவம் பள்ளிக்கூடத்தில் யாருக்கும் தெரியவில்லை. பெற்றோருக்கும் தெரியவில்லை.
எல்லாவகையான கேள்விகளுக்கும் வகை வகையாய் விடைகளை பந்திபோல் வலை தளத்தில் வைத்துப் பரிமாறும் கூகுள் இணையதளத்திற்கும் கூட இதற்கான விடை தெரியவில்லை.

அப்புறம் என்ன? இருக்கவே இருக்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) அதன் வாயிலாக பிரதமர் அலுவலகத்தை அணுகினார். பிரதமர் அலுவலகத்திற்கும் ஐஸ்வர்யாவின் வினாவுக்கு விடை அளிக்க முடியவில்லை. பாவம் பிரதமர்! அவரது அலுவலகத்தாரும் என்னதான் செய்வார்கள்?
ஒய் திஸ் கொலைவெறி என்ற ஆக்கப்பூர்வமும்(?) அறிவாற்றலும்(?) மிகுந்த திரைப்பாடலைப் பாடிய தனுஷ் என்ற சமூகப்போராளி(?)க்கு விருந்து கொடுப்பதில் ஈடுபாடு காட்டும் பிரதமர் அலுவலகத்திற்கு இதுபோன்ற சின்னபுள்ளத்தனமான கேள்விக்கு விடை தெரியுமா என்ன? வினா, சத்தம் இல்லாமல் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப் பப்படுகிறது.
இங்குதான் ஒருவர் கொஞ்சமும் சளைக்காமல் தன்னை நோக்கி வீசப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் எப்படி பதில் சொன்னால் மாட்டிக்கொள்ள முடியுமோ அப்படி பதில் சொல்லும் ஒருவர் இருக்கிறார் என நினைத்ததோ என்னவோ? ஐஸ்வர்யாவின் கேள்வி பிரதமர் அலுவலகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியில் தேசிய தகவல் பதிவகத்திற்கு அனுப்பப்படுகிறது. ஊருக்கெல்லாம் தகவல்களை அள்ளி வழங்கும் தேசிய பதிவகத்திற்குகூட இதற்கு விடை தெரியவில்லை.
தங்களிடம் இதுதொடர்பான எவ்வித ஆவணப்பூர்வ ஆதாரங்களும் இல்லை என தேசிய தகவல் பதிவகம் தெரிவித்ததோடு ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது தகவல்கள் கிடைத்தால் அதனை வைத்து ஆய்வுகளை மேற்கொள் ளுமாறு (அடேங்கப்பா) அந்த சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதிலிருந்து முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் எல்லாம் இதைப்போன்ற குபீர் சிரிப்புக் கதைகளைக் கொண்டதாகத்தான் இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இதுபோன்ற நிகழ்வுகள் அமைகின்றன.
ஹிந்தி தேசிய மொழி என்பதும், இந்த தேசத்தின் பெரும்பான்மை மக்களின் சமயம் ஹிந்து மதம் என்பது போன்ற தகவல்கள் இதுபோன்ற வகையைச் சார்ந்தவைதான் போலிருக்கிறது.
ஐஸ்வர்யாவைப் போன்ற துடிப்புமிக்க குழந்தைகள் இந்தியா முழுவதும் எழுந்து இதுபோன்ற வினாக்களை எழுப்ப வேண்டும். காந்தியடிகளைக் குறிப்பிட்ட பட்டம் வைத்து அழைத்துத்தான் அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதில்லை. காந்தியார் தன் வாழ்நாளின் போதே தன் மீது நேசம் காட்டிய கோடிக்கணக்கான மக்களைக் கண்டு மகிழ்ந்தார். அவருக்குப் பட்டங்கள் வழங்குவது என்பதெல்லாம் சமுத்திரத்துக்கு பிரேம் போட்டு புகைப்படமாகத் தொங்கவிடலாம் என நினைப்பது போன்ற அபத்தம்தானே தவிர வேறொன்றும் இல்லை.
அதுசரி. மக்கள் உணர்ச்சி மிகுதியில் அள்ளி வழங்கும் பட்டங்களின் பூர்வீகத்தை ஆராயப் புகுந்தால் அதிர்ச்சி குண்டுகளும் அநியாயக் காமெடிக் காட்சிகளும் வெளிப்படுமோ!

--அபுசாலிஹ்
-tmmk.info