சனி, 26 ஜனவரி, 2013

வி.களத்தூரில் 22-01-2013 செவ்வாய் கிழம்மை அன்று காவல் துரையின் தொடர் கைதைய்யும் அடக்கு முறயையும் கண்டித்து நடந்த முதல் போரட்டதின் புகைப்படம்







 
 
 புகைப்படம்
 
 
 
 
 
 
 
 
 
 
 


சன் நியூஸ் தொலைக்காட்சியில் விவாத மேடை - ஒரு விமர்சனம்

 
பயங்கரவாதத்துக்கு நிறம் உண்டா?







சன் தொலைக்காட்சி செய்தி அலைவரிசையில் நேற்று இரவு 9மணி முதல் 10 மணி வரை விறு விப்பான விவாத மேடை அரங்கேறியது. அரசியல் விமர்சகர் திரு.வீரபாண்டியன் ஒருங்கிணைத்தார்.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி,தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு.பீட்டர் அல்போன்ஸ், ஆர்.எஸ்.எஸ்.சார்பில் திரு.நம்பி நாராய ணன் ஆகியோர் விவாத மேடையில் பங்கேற்றனர்.
பி.ஜே.பி.யின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் திரு.எச்.ராஜா காணொளிக் காட்சி மூலம் இடை இடையே வந்து வந்து பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம்,ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்த கருத்தினை மய்யமாகக் கொண்ட கருத்துப்போர், களை கட்டியது. ஆர்.எஸ்.எஸ்.முகாம்களில் இந்துத்துவ தீவிரவாதப் பயிற்சி அளிப்பது பற்றிய சர்ச்சையை மய்யப்படுத் தியது விவாதம்.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எடுத்து வைத்தவை:
சுஷில்குமார் ஷிண்டே உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஒரு தகவலினை முன்வைத்துள்ளார். அதற்கு ஆதாரம் உண்டு என்பதற்கான மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைகள் - குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.ஈடுபட்டுள்ளது என்றும்,ஈடுபட்டவர்களின் 10 பேர் பட்டியல் கை வசம் உள்ளது என்றும் பட்டாங்கமாய் போட்டு உடைத்து விட்டார்.
இதற்கு பதில் என்ன? என்ற திராவிடர் கழகத் தலை வரின் வினாவிற்குத் தக்க பதில் அளிக்கப்படவில்லை.
மாறாக பட்டுக்கோட்டைக்கு வழி எங்கே என்றால், கொட்டைப் பாக்கு தூக்கு ஆறணா என்ற பழைய பழமொழி போல பதில் அளித்தார் திரு.நம்பி நாராயணன்.
காங்கிரசில் உலக மயம் பொருளாதாரத்தைக் கொண்டு வந்து விலைவாசி உயர்வு ஏற்பட்டுவிட்டது. இதனைத் திசை திருப்பும் பகையில்,வரப்போகும் தேர்தலை மனதிற்கொண்டு அபாண்டமாக இந்தப் பழியை காங்கிரஸ் போடுகிறது என்றார்.
உண்மையைச் சொல்லப்போனால் எடுத்துக் கொண்ட பிரச்சினைக்குச் சம்பந்தம் இல்லாமல் இவர்தான் திசை திருப்பும் வேலையில் இறங்கினார். (பொருளாதாரக் கொள்கையில் பிஜேபி (என்.டி.ஏ.) ஆட்சியும் உலகமயத்தைத்தான் பின்பற்றியது).
எழுப்பப்பட்ட கேள்விக்கோ விவாத மேடையின் மய்யப் புள்ளிக்கோ சம்பந்தமில்லாத சொற்கள் அவை.
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு பீட்டர் அல்போன்ஸ் ஒரு கருத்தினை எடுத்து வைத்தார்.ஒவ்வொரு தேர்தல் நடக்கும்போதும் இதுபோன்ற சிந்தனை மேடையை காங்கிரஸ் நடத்தும். ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் சம்பந்தப் பட்ட அமைச்சர்கள் அவரவர் துறைகளில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறுவார்கள்.
உள்துறை அமைச்சர் என்ற முறையில் கூறிய கருத்துத்தான் - தகவல்தான் சுசில்குமார் ஷிண்டே கூறியதாகும்.
இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ்.மீது கூறப்படும் இந்தக் கருத்து இப்பொழுதுள்ள உள்துறை அமைச்சர் ஷிண்டே அவர்கள்தான் முதன்முதலாகக் கூறுவதாகக் கருத முடியாது.இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அவர்களே இந்து மகா சபை ஆர்.எஸ்.எஸ். மீது இத்தகைய குற்றச்சாற்றை வைத்துள்ளார்.
ஷிண்டேக்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த திரு.ப.சிதம்பரம் அவர்களும் கூட இதே குற்றச்சாற்றை முன்வைத்துள்ளார்களே என்று கூறி விட்டு, ஒரு முக்கிய குற்றச்சாற்றை ஆர்.எஸ்.எஸ்.,பா.ஜ.க. மீது வைத்தார்.
பல்வேறு இனங்கள்,மொழிகள், மதங்கள் கொண்ட ஒரு நாடு இந்தியா. இதில் குறிப்பிட்ட மதத்தை தனிமைப்படுத்தி -வகுப்புவாதத்தை முன்னிலைப்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீரழிக்க முயலுவது ஆர்.எஸ்.எஸ்.;அதன்பயிற்சி முகாம்களில் வன்முறைப் பயிற்சிகள் நடைபெறுவதும் நாடறிந்த ஒன்றாகும்.
நாட்டில் நடைபெற்ற பல்வேறு வன்முறை நிகழ்வு களுக்கு ஆர்.எஸ்.எஸ். காரணம் என்பதை உள்துறை செயலாளரே ஆதாரம் இருக்கிறது என்று சொன்ன பிறகு - ஆர்.எஸ்.எஸ்.நண்பர்கள் இதில் வாதிட என்ன இருக்கிறது என்றார்.
காணொளிக் காட்சி மூலம் வந்த எச்.ராஜா - உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ். எஸிக்குக் கொடுத்த நற்சான்றினைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். (ஆர்.எஸ்.எஸ்ஸில் வகுப்புவாதம் பற்றி படேல் சொன்னதற்கான ஆதாரம் என்னிடம் உண்டு என்று திரு.பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கான பதில் இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்).
திராவிடர் கழகத் தலைவர் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் எடுத்து வைத்த உள்துறை செயலாளர் கூற்றுக்கு நேரிடையாக பதில் சொல்ல இந்துத்துவாவாதிகளால் சொல்ல முடியவில்லை.
அரசியல் நோக்கத்தோடு சொல்லப்படும் குற்றச்சாற்று என்று அவர்கள் சொல்லுவதில் அர்த்தம் கிடையாது, உள்துறை செயலாளர் என்பவர் அரசு உயர்நிலை அலுவலர். அவர் மீது அரசியல் சாயம் பூதுவது அநாகரிகமே! பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில் இருந்ததில்லையா?
அப்பொழுது அரசு அதிகாரிகள் சொன்ன தெல்லாம் கூட அரசியல் உள்நோக்கம் கொண்டவை தானா? தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் யாரையும் பலிகொடுக்கத் தயங்காதவர்கள் இந்த இந்துத்துவாவாதிகள் என்பது விளங்கிவிட்டது.
(பி.ஜே.பி. ஆட்சியின்போது 80ஆயிரம் ஆர்.எஸ். எஸ்.காரர்கள் நிருவாகப் பதவிகளில்(நுஒநஉரவஎந ஞடிளவள) நியமனம் செய்யப்பட்டனர்.இராணுவத்தின் முக்கிய பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நியமிக் கப்பட்டனர் என்று விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகாவத் போட்டுடைத்தாரா இல்லையா?
பி.ஜே.பி. தேசிய செயற்குழுக் கூட்டத்தில் உயர் நிலை இராணுவத் தளபதிகளை, அதிகாரிகளை அழைத்ததும் நினைவிருக்கட்டும்)
பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.என்பவை வகுப்புவாதம் கொண்டவை. சிறுபான்மை மக்களுக்கு எதிரானவை.இவற்றின் அடிப்படைக் கொள்கையே அதுதான் என்று குற்றச்சாற்றைப் பதிவு செய்தார் திராவிடர் கழகத் தலைவர். அவற்றிற்கு ஆதாரமாக ஆர்.எஸ். எஸின் குரு நாதரான கோல்வால்கரின் க்ஷரஉ டிக கூடிரபாவள (தமிழில்: சத்திய கங்கை) என்பதிலிருந்து எடுத்துக் கூறினார்.
வன்முறைதான் நேர்முகமானது. சாத்மீகம் என்பது எதிர்மறையானது என்று கூறப்பட்டுள்ளதே.
கிறித்தவர்கள்,கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்;முஸ்லிம்கள் ராமனை வழிபட வேண்டும் என்று கோல்வாக்கர் எழுதியுள்ள தற்கு என்ன பதில் என்ற கழகத் தலைவரின் வினாக்களுக்கு விடை இல்லை.
பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிப்பது போல எச்.ராஜா வாய்ச்சாங்குள்ளி அடித்தார்.
இலண்டனில் இருந்து வெள்ளைக்காரர்கள் தமிழ்நாட்டை நேரிடையாக ஆள வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்கள் இவர்கள் என்று சம்பந்தம் இல்லாமல் அரட்டை அடித்தார் எச்.ராஜா.
விவாத மேடையின் நோக்கத்தை வேறு இடத்திற் குக் கொண்டு போக முயற்சிக்க வேண்டாம் என்று சொன்ன தமிழர் தலைவர் அவர்கள்,
ஆர்.எஸ்.எஸ்.சுதந்திரத்துக்காக பாடுபட்ட அமைப்பா? என்று எதிர்கேள்வியை வைத்தார். அது பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தால் பிரச்சினையை விட்டு வேறு எங்கோ போனதாகிவிடும் என்று மிகப் பொறுப்பாகப் பதிலடி கொடுத்தார்.
1932 டிசம்பரில் வெளியிடப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களும், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியின் வேலைத் திட்டம் என்பதில் முதல் திட்டம் என்ன தெரியுமா?
பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவைப் பூரண விடுதலை செய்வது என்பதாகும்.காங்கிரஸ் முழு சுதந்திரம் கேட்டது கூட இந்தக் கால கட்டத்திற்குப் பிறகுதான்.1942 ஆகஸ்டு வெள்ளையனே வெளி யேறு இயக்கத்திலிருந்து விலகிக் காங்கிரசை விட்டே விலகி ஓடியவர் தான் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் என்ற வரலாறு எல்லாம் தெரியாதா?
இந்தியாவின் முதல் இந்தியர் நீதிபதி என்று பார்ப்பனர் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களே -அந்த முத்துசாமி அய்யர் சென்னைப் பட்டதாரி களுக்கு என்ன அறிவுரை கூறினார்?
நமது மாட்சிமைமிக்க அரசுக்கும், பிரிட்டானிய நாட்டுக்கும் ஆழ்ந்த விசுவாசம் காட்டும் வகையில் உங்கள் எண்ணமும் செயலும் அமையட்டும். ஏக காலத்தில் போதிய அளவில் திரும்பச் செலுத்த முடியாத வகையில் நாம் அவர்களுக்குக் கடமைப் பட்டு இருக்கிறோம். ஆரிய இனத்தில் இரு பிரிவு களும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந் திருக்கின்றன. அதனுடைய பெருங்கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டானிய ஆட்சிக்கு திறமை இருக்கிறது
- என்று பேசியவர்தானே ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர். (தேவையில்லாமல் வாயைக் கொடுத்துப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம்).
- வளரும்
-- கலி.பூங்குன்றன்-
 
 

குவைத் மண்டலம் த மு மு க - ம ம க சார்பாக 25.1.2013 அன்று இரத்த தான முகாம் ஜாப்ரியா இரத்த வங்கியில் மிக சிறப்பாக நடைபெற்றது.

 



 
 
 
 
 
 
 
 
 
 
 


கமல்ஹாசன் கருத்துக்கு தமுமுக கண்டனம்




 



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:

 விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கமல்ஹாசன் ஏதேதோ கூறுகிறார். முதலில் கலாச்சார பயங்கரவாத்தை எதிர்கொள்வேன் என்றார். இப்போது முதுகில் குத்திவிட்டார்கள் என்கிறார், தேசப்பக்தி உள்ள முஸ்லிம்கள் எதிர்க்கமாட்டார்கள் என்கிறார்.
முஸ்லிம்களை கொச்சைப்படுத்த கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபம் படப் பிரச்சனை கருத்து தீவிரவாதமாகவே பார்கிறோம். படத்தை பார்க்க காலத்தை நீட்டித்தார். படத்தை இறுதிவரை பார்த்தப் பின் அதிர்ச்சி அடைந்ததால் அவருடன் மேலும் ஏதும் பேசாமல் கிளம்பினோம். அவர் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையை படம் தகர்த்து விட்டது.

... இந்தப் படத்தில் எந்த மாச்சரியங்களும் இடம்பெறாது என்றும், கமலுடன் நடந்த முதல் இரண்டு சந்திப்புகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அவருடைய அலுவலகத்தில்இந்த படத்தை நாங்கள் பார்த்த போது அங்குலம் அங்குலமாக படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு விரோதமாகவும் அனைத்துகாட்சிகளும், கதாபாத்திரங்களும் ஒரு வெறுப்பு பிரச்சாரமாகவே அமைந்திருந்தது இதன் காரணமாகதான் இப்படத்தை தடை செய்ய தமிழக அரசிடம் கோரினோம்.
படத்தை பார்த்த பின்னர் நாங்கள் படத்திற்கு கமலிடம் நற்சான்றிதழ் எதுவும்தரவில்லை தேசப்பற்று இருக்கின்ற காரணத்தால் தான், நாட்டில் ஏதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் தான் களத்தில் இறங்கினோம்.
எனவே கமல்ஹாசன் அவர்களின் கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.

இவண்,
(ஜே.எஸ்.ரிபாயீ)

தேசபக்தியின் அளவுகோல் எது என்பதை கமல் அறிவிக்க வேண்டும்-பாப்புலர் ஃப்ரண்ட்

 

தேசபக்தியின் அளவுகோல் எது என்பதை கமல் அறிவிக்க வேண்டும்-பாப்புலர் ஃப்ரண்ட்

 

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15 நாள் தற்காலிக தடை விதித்ததை தொடர்ந்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை கமலின் உண்மை முகத்தை (சுயரூபத்தை) வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு ஆதரவான திரைப்படம் என்றும் இத்திரைப்படம் வெளிவந்தால் முஸ்லிம்கள் பிரியாணி கொடுப்பார்கள் என்றும் கூறினார். ஆனால் திரைப்படத்தின் உண்மை நிலையோ வேறு. திரைப்படம் முழுவதுமே முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், உலகப்பொதுமறையாம் திருக்குர்ஆனை தீவிரவாத நூலாகவும், முஸ்லிம்களின் வழிபாட்டை தீவிரவாத வழிப்பாடாகவும் சித்தரித்தே வெளிவந்துள்ளது. முஸ்லிம்களின் உயர்ந்த கலாசாரத்தையே தீவிரவாத கலாச்சாரமாக சித்தரிக்கும் கமல் அவரின் சுயரூபத்தை எதிர்க்கும் போது அதை கலாச்சார தீவிரவாதம் என்கிறார். இது கமலின் இரட்டை முகத்தையே காட்டுகிறது.




மேலும் விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்கள் தேசபக்தி இல்லாதவர்கள் என்று அறிக்கைவிடுகிறார். கமல் தேசபக்தியின் அளவுகோல் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். தன்னுடைய படத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக மற்றவர்களின் தேசபக்தியை குறை சொல்ல வேண்டும் என்றால் கமல் தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும். ஹேராம், உன்னைப்போல் ஒருவன், போன்ற திரைப்படங்களில் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக கருத்துக்களை பதிவு செய்ததன் தொடர்ச்சியாக விஸ்வரூபத்தை வெளியிட்டுள்ள கமலுக்கு முஸ்லிம்களின் தேசப்பற்றை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

தங்களுடைய பொய் முகத்தை மறைப்பதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் பயன்படுத்தும் வார்த்தைதான் தேசப்பற்று. இதையே இன்று கமல் உதிர்த்திருப்பதன் மூலம் கமலின் சுயரூபம் விஸ்வரூபமாக வெளிவந்துள்ளது. இது போன்ற விஷமக்கருத்துக்களை வெளியிடுவதை கமல் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். இது போன்ற விஷமக்கருத்துக்கள் அறியாமையில் வெளியிடும் கருத்துக்களைப் போல் தெரியவில்லை. மாறாக எதேச்சியதிகாரத்தின் தூண்டுகோலாகத்தான் உள்ளது. கமலின் வார்த்தைகளும் முஸ்லிம்களின் போராட்டத்தை தீர்மானிக்கும்.


முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யவேண்டும் – எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!


இந்திய விடுதலைக்காக போராடியவர்கள்... மறைக்கபட்ட.. மறுக்கபட்ட... உன்மை....தெரிந்தவை சில தெரியாதவை பல...





 
 
முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டோம், நாமே இந்த நாட்டை நிர்வாகம் செய்தோம் நாமே இழந்தோம் அதர்க்காக நாமே போரடினோம் ,வென்றோம் ஆனால் போரடிய பெயர் வேரொருவனுக்கா?

1. வரலாற்று நாயகன் திப்பு சுல்த்தான், போர்கள் மற்றும் நவீன ஆயுதங்களால் வெள்ளையர்களை நிலைகுழைத்து வெருண்டோட வைத்தவர் ஆனால் இன்று அவரை பற்றி யாரா...
வது பேசினோமா இவர் தான் பாடு பட்டார் என்று..?

2. இந்திய விடுதலைக்காக வித்திட்ட முதல் போர் சிப்பாய் கழகம், இதில் 90% பங்கேற்றவர்கள் முஸ்லிம்கள் ,80 % கொல்லபட்டவர்கள் முஸ்லிம்கள்,யாருக்காவது இது தெரியுமா? இந்த சிப்பாய் கழகத்தின் படை தளபதி அஹமதுல்லாஹ் ஷாஹ், ஆனால் மங்கள் பாண்டெய் வை பற்றி பேசுபவர்கள் உண்டு, இது பச்சை துரோகம் இல்லையா?

3.முஸ்லிம் ஆட்சியாளர்கள் மார்க்க கடமை என்று ஃபத்வா கொடுத்தார்கள் ஆங்கிலேய படிப்பை துரக்க வேண்டும், அவர்களின் ஆடையை அனிய கூடாது என்று ! இது போன்று வேரு மதத்தவர்களில் எவேரேனும் உண்டா? இதனால் தான் இன்று கல்வியில் பின் தங்கியிருக்கிறது முஸ்லிம் சமுதாயம்!

4.முஸ்லிம் மன்னர்கள் பல நாடுகலாக பிரிந்து கிடந்த மாநிலங்கள், சிற்றூர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே மாநிலமாக தமிழகம் போன்றவற்றை மாற்றினார்களே இது பங்களிப்பு இல்லையா? 800 வருடமாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தார்களே இவற்றை மாற்றி காட்டினார்களே இது பங்களிப்பு இல்லையா?

5.முஸ்லிம் மன்னர்கள் பல வழக்குகளை தீர்ப்பதர்க்காக தனித்தனியே பன்சாயாத்து,மாவட்ட ஆட்சியகம், உயர் நீதி மன்றங்கள்,மாஜிஸ்தரேட் நீதி மன்றங்கள், போன்ற அமைப்பை உருவாக்கி இன்றும் வெற்றி கானுகின்றோமே இது பங்களிப்பு இல்லையா? இன்றும் புழக்கத்தில் உள்ள வகீல்,மாஜிஸ்தரேட்,வாயிதா ,மாசூல், கஜானா ,ஆஜர், போன்ற அரபி வார்தைகளை தந்து உதவியாக இருக்கிறதே இதை மாற்ற முடிந்ததா?

6.தங்கம் ,வெள்ளி நானயங்கள் புழகத்தில் இருந்தால் நாட்டின் பொருளாதாரம் அடி வாங்கும் என்று ருபாய் நோட்டுகளை உபயொக படுத்த அறிமுகபடுத்தியவர் மன்னர் முஹம்மது பின் துக்லக், மேலும் இவர் தான் நிலம் சம்பந்தமான வழக்குகளை தீர்க்க முதன் முதலில் சட்டம் இயற்றியவர், இவர் தான் தொல்லியல் துரையையும் நிருவி நாட்டுக்கு பெரிதும் இதை அர்ப்பனித்து உதவியவர்,,

7.முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்க்கு பல காரணங்கள் அமைந்தாலும் மத ரீதியாக அமைந்த காரணம் ,உதுமானிய பேரரசால்(otoman empire) மத தலமையகமாக இயங்கிகொண்டிருந்த துருக்கியை ப்ரிடிஷ் அரசு கைபற்றியது,இதன் காரணமாga முஸ்லிம்கள் பொங்கி எழுந்து மேலும் இந்தியாவில் போராட்ட பங்களிப்பை வீரியப்படுத்தினர்.

8.நாட்டில் பிரச்சாரம் செய்தால் சிறை தண்டனை அமலில் இருந்த காலத்தில் யாருமே பிரச்சாரம் செய்ய முன் வராத நேரத்தில் ஜுமுஅ சொற்பொழிவை பிரச்சார களமாக மாற்றி ஆங்கிலேயர்களால் சுட்டு தள்ளப்பட்டு தமது பங்களிப்பை காற்றி தமது இன்னுயிரையும் தியாகம் செய்து ரத்த கறை இன்னும் காட்ச்சியளிக்கும் கூனி மஸ்ஜித், தேவ் பந்த், உத்திர பிரதேசம், இந்தியா... இதை போன்று இந்துக்கள் கோயில்களில் செய்தார்களா? கிருஸ்த்துவர்கள் தேவாலயங்களில் செய்தார்களா? சீக்கியர்கள் குருதுவாரங்களில் செய்தார்களா? அல்லது இந்த படுகொலை பற்றி யாருக்காவது இன்று தெரியுமா? ஆனால் ஜாலியன் வல்ல பாக் படுகொலை மட்டும் நியாபகம் இருக்கும் .. இது முஸ்லிம்கலுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
 
9.இந்திய தேசிய படையை(சுதேசி இயக்கம்) நாட்டிற்க்காக போராட உருவாக்கியவர் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் வாங்க நிதி வசூல் செய்யும் பொழுது இந்தியாவில் போதிய நிதி வசூல் செய்ய முடியாததால் பர்மா சென்று உதவி நாடிய பொழுது வள்ளல் ஹபீப் அன்றய காலத்திலயே 1.5 கோடி நிதி கொடுத்து பெரிதும் உதவினார்,இவரை பற்றி யாருக்காவது இன்று தெரியுமா அல்லது சுதந்திர ஏட்டிலாவது குறிக்க பட்டு இருக்கிறதா? இது முஸ்லிம்களுக்கு இழைக்கும் துரோகம் இல்லையா?.. (குறிப்பு:- அன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை 24 பைசா)...
 
10.அன்று நேதாஜிக்கு தெரியும் முஸ்லிம்கள் தான் நாட்டிற்க்காக தியாக செய்ய முன் வந்து தம் உயிரையும் துச்சமாக மதித்து போராடுவார்கள் என்று அதனால் தான் நேத்தாஜியின் படையில் படை அனைத்திற்க்கும் தளபதியாக இருந்தவர் ஷா நவாஸ் கான், இவரது படையில் 90% முஸ்லிம்கள் , ரத்தம் சிந்தியது முஸ்லிம்! ரத்தம் சிந்தப்படுவதற்க்கு முஸ்லிம் ! பெயர் மட்டும் முஸ்லிம்களுக்கு இல்லை! இது தான் இந்த நாட்டின் சுதந்திரமான துரோகம்!
 
11.சுதந்திர இந்தியாவில் சுதந்திரதுக்கு முன் பாராளமன்றத்தில் இருபது மந்த்ரிகளில் ஐந்து முஸ்லிம்கள் கரீம் கனி உட்பட ஆனால் இன்று? ஏன் இந்த துரோகம்?
 
12.நாட்டின் பல போராடங்களில் ஜனநாயக போராட்டம் மிகமுக்கியமானது ரயில் எரிப்பு கள்ளுக்கடை மறியல் உப்பு சத்தியாகரகம் போன்றவை, இதர்க்கு காங்கிரஸ் மேலிடம் தான் தலைமையகம் இதன் பொருப்பு அன்றய காலத்தில் சாதரணமானது அல்ல, சுதந்திரம் வாங்கும் வரை இதன் பொருப்பு வகித்து தலைமைக்கு தலைவராக இருந்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்..ஆனால் சுதந்திரம் வாங்கியதிலிருந்து இன்று வரை யாரவது தலைமை பொருப்பில் உண்டா?
 
13.அன்று சுதேசி கம்பெனிக்கு 19 நபர் கொண்ட கமிட்டீக்கு பொது செயளாலராய் இருந்தவர் பக்கிர் முஹம்மது ராஊத்தர், துனை செயளாலராய் இருந்தவர் நம் அணைவருக்கும் தெரிந்த கப்பலோட்டிய தமிழன் வா.ஊ..சிதம்பரம், மேலும் கப்பல் வாங்குவதர்க்காக நிதி திரட்ட பட்டது அப்பொழுது இந்தியா முழுவதும் திரட்டிய நிதி 215.13/- அனா மட்டுமே இந்த நிதி போதாது என்று இதர்க்காக பக்கிர் முஹம்மது ராஊத்தர் மட்டும் கொடுத்த பணம் அன்றே ஒரு லட்சம் ரூபாய், கப்பலின் முதலாளி பணம் தரவேண்டும் டிரைவர்(கப்பலோட்டிய தமிழன் வா.ஊ..சிதம்பரம்) பெயர் எடுக்க வேண்டும், இது தான் சுதந்திர இந்தியாவின் லட்ச்சணம்! இது மெகா துரோகம்!
 
14.கப்பல் ஓட்டியதர்காக கைது செய்யபட்டு விட்டார் சிதம்பரம் ,சிறை சென்றார் இவரை விடுவிப்பதர்க்காக வாய் மூச்சு கூட விட முடியாத காலத்தில் சிறைக்கு வெளியே போரட்டம் நடத்தபட்டது இதில் பங்கேற்றவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள் போரட்ட களத்தில் முஹம்மது யாசீன் என்பவர் ஒருவர் மட்டுமே கொல்லபட்டார் இவரை பற்றி இந்தியாவில் யாருக்காவது இன்று தெரியுமா?
 
15.ஆங்கிலேயர்களுக்கு தொல்லை கொடுத்ததில் முக்க்ய பங்கு வகித்ததில் வேலு நாச்சியாரும், மருது பாண்டியரும் ஒருவர் இவர்களுக்கு பாதிக்க பட்ட காலத்தில் தங்க அடைக்களம் கொடுத்து உயிரை காத்தவர் மா மன்னர் திப்பு சுல்த்தான்,
 
16.காந்தியின் கள்ளுக்கடை மறியல் முக்கியமானவை, இதில் பங்கேற்றால் மூன்று வருடம் சிறை தண்டனை மட்டும் அல்ல கடுங்காவல் சிறை தண்டனை இதை தெரிந்தும் மதுரை கோரிப்பாளயத்தில் 19 பேர் முன்வந்து போராட்டம் நடத்தினர் இதில் 10 பேர் முஸ்லிம்கள் இன்றும் கோரிப்பாளயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய பட்ட ரிக்கார்ட் உல்லது..இதை கூட மறைத்து ஏன் இந்த துரொகம் முஸ்லிம் சமுதாயத்திற்க்கு?
 
17.அன்று நாட்டின் தேசிய கொடியை ஏந்தி சென்றால் சுடப்படுவார்கள் மேலும் 7 வருடம் சிறை தண்டனை அவ்வாரு கொடி ஏந்தி செல்வதும் சாதரண விஷயமும் அல்ல அவ்வாரு தைரியமுடன் செய்தவர் பட்டியலில் கொடி காத்த திருப்பூர் குமரன் மட்டுமே உள்ளார் , ஆனால் முஹைதீன் கான்,அப்துல் லத்தீப்,அப்துல் ரஹீம், மதுரை பாவா சாஹிபு, மதராசபட்டினம் ஷேக் சாஹிபு போன்ற பெயர்கள் மறைக்க பட்டு விட்டது ஏன் இந்த பச்சை துரோகம்?
 
18.போரட்ட சூட்டை தனிக்க ஆங்கிலேய அரசு புது யுக்தியை கையாண்டது அதில் ஒன்று பட்டம் அளிப்பது.. முஸ்லிம்களுக்கு சம்சுல் உலமா( உலமாக்களின் சூரியன்), கான் சாஹிப் பட்டம் மேலும் மற்ற மதத்தவர்களுக்கு ராவ் பஹதுர் ,சர் பட்டம்.. ஆணால் இந்த பட்டங்களை எல்லாம் துறந்து முழு எதிர்ப்பை காட்டியவர்கள் முஸ்லீம்கள் மட்டுமே மற்றவர்கள் இதை பயன் படுத்தி நாட்டிர்க்கு துரோகம் இழைத்து மேல் சென்று விட்டனர் இதனால் தான் இன்று படிப்பில் பின் தங்கிய நிலை நம் சமுதாயத்திற்க்கு.. (குறிப்பு: கான் சாஹிப் பட்டம் இருந்தால் இன்றய கவர்னராக இருந்தால் என்ன மதிப்பும் மரியாதையும் கிடைக்குமோ அதே மதிப்பு அந்த பட்டத்திர்க்கு உண்டு என்பதை என்னி பாருங்கள் ,இதை வைத்து இருப்பவர் அன்று எந்த காவல் நில்யதிலும் சென்று யாரை வெண்டுமானாலும் விடுவிக்கலாம், ஆங்கிலயே அரசு ஆளுனரிடம் நேரடியாக சந்தித்து பேசி தேவையானதை நிறைவேற்றலாம்)
 
19. பல முஸ்லிம்கள் சிறை வாசம் செண்று செத்து மடிந்தனர், ஆனால் நம் முன்னால் பிரதமர் வாஜ்பாய் போராட்ட்த்தை பார்க்க சென்ற பொழுது கைதாகி சிறைக்குள்ளே எழுதிய கடிதம் இன்றும் உள்ளது அதில் அவர் எழுதியது என்னவென்றால் " நான் ஒரு ஓரமாக என்ன நடக்கிறது என்று பார்க்க தான் சென்றிருந்தேன் இதற்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"... இவ்வாரு எழுதிய இவரை நம் நாட்டின் பிரதமர் ஆக்கிவைத்தோம் , ஆனால் சிறை சென்று செத்து மடிந்த முஸ்லிம்களின் பெயரை கூட நாட்டின் ஏட்டில் எழுத மணம் வரவில்லை!

நன்றி: சகோதரர் பி.ஜே


வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு-திருச்சி மரக்கடை பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் தடை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 72 பேர் கைது.

திருச்சி, ஜன. 25.

திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரில் இரு தரப்பினருக்கிடையே முன் விரோதம் இருந்தது. கடந்த 22ம் தேதி அங்கு நடந்த திருமண பெண் அழைப்பு நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட தெரு வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டு 10 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து 71 பேரை கைது செய்தனர். இதில், போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் அனுமதி மறுத்ததுடன் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் சபியுல்லா தலைமையில் 72 பேர் நேற்று மரக்கடை ராமகிருஷ்ண பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்

அவர்களை தடுத்து கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.














 
மேலும் தமிழகமெங்கும் ஆர்பாட்டம் ஒரு பார்வை.


திருவாரூரில்...















தஞ்சாவூரில்...


மதுரையில்...

 
 
புதுக்கோட்டையில்...
 



பெரம்பலூர் வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த காவல் துறை நிர்வாகத்தை கண்டித்துதிருவாரூர் மாவட்டம் லச்சுமா காகுடியில் பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் கொண்ட மக்களின் ஒரு பகுதியினர் வரவேற்புரை : ஷேக் அஜ்மல் தலைமை : ஹிலயத் ( மாவட்ட செயலாளர் pfi ) முன்னிலை : ஹாஜி ஷேக் (தஞ்சை மாவட்ட செயலாளர் pfi ) கோசம் : லத்திப் நன்றிவுரை: சாகுல் ஹமீது


 

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் 1000 பேர் கைது .

பெரம்பலூரில் அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம்: 1000 பேர் கைது

பெரம்பலூர், ஜன. 26:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் கிராமத்தில் கடந்த 22ம் தேதி 2 சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஏராளமானோரை வி.களத்தூர் போலீசார் கைது செய்த னர்.

தொடர்ந்து முஸ்லிம்கள் தொழுகை நடத்திவிட்டு வரும் போது 70க்கும் மேற் பட்ட மாணவர்களையும், பெரியவர்களையும் கைது செய்து வழக்கு போட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த போலீசார் எஸ்பி ராஜசேகரன் உத்தரவின் பேரில், அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த திடீர் கைது சம்பவத்தால் நேற்று பெரம்பலூர் நகரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 








 






vkalathur02


 
- சை.பைஜுர் ரஹ்மான்.
                          சை.பைஜுர் ரஹ்மான்.