சனி, 20 அக்டோபர், 2012

தொலைபேசி உரையாடல் "டேப்" அழிந்து விட்டது : புலனாய்வுத்துறையின் "சதி" நீதிமன்றத்தில் அம்பலம்!


                  மும்பை குண்டுவெடிப்பில், தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாக கொண்டு, முஸ்லிம்கள் கைது செய்யப்பட வழக்கில், மேற்படி தொலைபேசி உரையாடல் குறித்த (CDR) "டேப்" அழிந்து விட்டதாக, கூறி நீதிமன்றத்தில் தலைகுனிந்து நின்றது,புலனாய்வுத்துறை.

சென்ற ஆண்டில் "மும்பை லோக்கல் ரெயிலில்" குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட வழக்கில், அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், கமால் அஹ்மத் அன்சாரி, டாக்டர் தன்வீர் அஹ்மத், முஹம்மத் பைசல் ஷேக், இஹ்திஷாம் சித்தீகி, முஹம்மத் மாஜித் ஷரீப், ஷேக் ஆலம், முஹம்மத் சாஜித் அன்சாரி, அப்துல் வாஹித், முசம்மில், சுஹைல் மஸ்வூத், சமீர் அஹ்மத், நவீத் ஹுசைன் மற்றும் ஆசிப் கான் ஆகிய 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காக "ஜம்யியதுல் உலமா" (அர்ஷத்  மதனி) சார்பில் தொடரப்பட்ட வழக்கில், முஸ்லிம்கள் சார்பில் ஆஜரான வக்கீல்களின் சரமாரிக்கேள்விகளுக்கு, பதிலளிக்கமுடியாமல் திணறினார்,புலனாய்வுத்துறை சார்பில் ஆஜரான "அடிஷனல் சாலிசிட்டர் ஜெனெரல்" தார் யூஷ் கம்பாட்டா.

குறிப்பாக, "தொலைபேசி உரையாடல்"களை முக்கிய ஆதாரமாக புலனாய்வுத்துறை கூறியிருந்தபடியால், அந்த உரையாடல்கள் அடங்கிய "டேப்" ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கோரினர்,முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர்கள்.

கைது செய்யப்பட்டவர்கள், குண்டுவெடிப்பின் போது சம்பவ இடத்தில் இருந்ததாக, புலனாய்வுத்துறை கூறியிருந்தது.
மேலும், அவர்கள் தங்களுக்கிடையில் பேசிக்கொண்டதாக சொல்லப்படும் உரையாடல்கள் மற்றும் சம்பவம் நிகழ்ந்த போது அவர்கள் எங்கிருந்தனர்? போன்ற "தொலைதொடர்பு" ஆதாரங்கள் குறித்து கேள்வியெழுப்பியபோது, அது குறித்த ஆவணங்கள் அழிந்து விட்டதாக, அரசு வக்கீல் கூறினார்.

இதை  கேட்டு கடும் கோபமடைந்தார் நீதிபதி "அபை தப்சே".
தொலைபேசி உரையாடல் அழிந்து விட்டதென்றால், புலனாய்வுத்துறை அதிகாரிகளை-குறிப்பாக, கைது நடவடிக்கைக்கு  தலைமை தாங்கிய "ராகேஷ் மாரியா" என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி கோரிக்கை விடுத்தனர், நமது வழக்கறிஞர்கள்.

இதை குறித்துக்கொண்ட நீதிபதி, முதல்கட்ட "வாத-பிரதிவாதங்களுக்கு பிறகு, அது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடும்போது, கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள் அப்பாவிகள், அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதர்கள், சம்பவ இடத்தில் அவர்கள் இருக்கவுமில்லை, தொலைபேசியில் பரஸ்பரம் பேசிக்கொள்ளவுமில்லை என்று வாதிட்டனர்.

அத்துடன், குறிப்பிட்ட நாளின்போது, இவர்கள் எந்த எல்லைகளில் இருந்தனர்? யாரோடு பேசினர்? போன்ற எல்லா விவரங்கள் குறித்தும், உரிய தகவல்கள்களை வழங்கிட, சம்மந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்தனர்.

இந்த வழக்கில், "ஜம்யியதுல் உலமா" சார்பில், யோக் சௌத்ரி, ஷரீப் ஷேக், வஹாப் கான், மற்றும் அன்சாரி தம்போலி ஆகியோர் வாதாடினர்.

நன்றி - maruppu.in

அதிசயம்!.... ஆனால் உண்மை!! : சென்னையில் "வக்ப்" வாரிய சொத்து மீட்பு!



                     சென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய "வக்ப்" சொத்துக்கள் உள்ளன.

இதில், 90% சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது.

வேதனை என்னவென்றால், இந்த சொத்துக்களை மீட்பதற்காக ஆங்காங்கே உள்ள "உள்ளூர் மக்கள்" முயற்ச்சித்தாலும் -ஆக்கிரமிப்பாளர்களே அசைந்து கொடுக்க முற்பட்டாலும், "வக்ப் வாரியத்தில் வேலை பார்க்கும் ஊழலின் ஊற்றுக்கண்களாக செயல்படும் அதிகாரிகள்" பெரும் தொகையை "கையூட்டு" பெற்றுக்கொண்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக, நேரடியாகவே களத்தில் இறங்கி, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு சட்டரீதியான (குறுக்கு வழிகள் குறித்த) ஆலோசனைகளை வழங்கி, அவர்களுக்கு உறுதுணையாக செயல்படுவர்.

அந்த அளவிற்கு, வக்ப் வாரியத்தில் "லஞ்சம்" தலை விரித்தாடுகிறது.

இதில், ஓரிரு அதிகாரிகள் மட்டும் விதி விலக்காக இருக்கலாம்.

தற்போது, சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த, வக்பு வாரியத்துக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள 2 கிரவுண்ட் இடம் மீட்கப்பட்டது.

அங்கு கட்டப்பட்டிருந்த 2 மாடிக் கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அந்தக் கட்டடத்தை இடித்து, வேலி அமைக்கும் பணி செவ்வாய்கிழமை (16/10) நடைபெற்றது.

இந்த இடத்தை "திமுக பிரமுகர்" ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார்.

வக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், முதன்மைச் செயலர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டடம் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டது.

"அ.தி.மு.க"வை சேர்ந்த "எம்.ஜி.ஆர். ரசிகர்" மன்றத்தலைவரும் வக்ப் வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன், நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடு பட்டது,பாராட்டுக்கு உரியது.

இதே ஐஸ் ஹவுஸ் பகுதியில் மட்டும் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 27 கிரவுண்ட் நிலம் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

அவை அனைத்தையும் முறையான முயற்சிகள் மூலம் மீட்கப்பட வேண்டும், என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் கோரிக்கையாகும்.

இது குறித்து தமிழ்மகன் உசேன் குறிப்பிடும்போது, முதல் கட்டமாக சென்னையில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து வக்பு வாரிய இடங்களும் மீட்கப்படும்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடங்கள் மீட்கப்படும் என்றார்.


நன்றி - maruppu.in

"ராமஜென்ம பூமி" சுற்று வட்டாரங்களில் எந்த இடத்திலும் மசூதி கட்ட விடமாட்டோம் : உமா பாரதி!


                                  பாபர் மசூதியை ராமஜென்மபூமி என சார்ச்சைக்கு உள்ளாக்கிவிட்டதால், புதிதாக பொறுப்பேற்றுள்ள உத்தர பிரதேச அரசு, சுமூகமான ஒரு நிலைக்கு முயற்சிப்பதாக, ஊகங்கள் அடிப்படையில் "ஹிந்துத்துவா சக்திகள்" பேசி வருகின்றன.

குறிப்பிட்ட 70 ஏக்கர் நிலத்தை விட்டுவிட்டு, அதன் அருகில் உள்ள ஒரு இடத்தில் மசூதி கட்டும் நிலத்தை முலாயம் சிங் தேடி வருவதாக, அவர்கள் சொல்கின்றனர்.

இது தவிர, அலகாபாத் கட்டப்பஞ்சாயத்து (கோர்ட்) தீர்ப்பு மூலம், முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்ற 3ல் ஒரு பகுதி நிலத்தில் "தோட்டம்" அமைத்து பராமரிக்கும் திட்டம் உள்ளதாகவும் "வதந்திகள்" கசிய விடப்படுகிறது.

இதில், முஸ்லிம்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், யூகங்களுக்கு பதிலளிக்க தேவையில்லை என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் அமைதி காத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து அனல் கக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கங்கை நதி பாதுகாப்பு யாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ.க.வின் உமா பாரதி, நேற்று "காஸ் கஞ்" பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் "மத துவேஷ கருத்து"க்களை கொட்டி தீர்த்தார்.
அங்கு பேசிய உமா பாரதி, எக்காரணம் கொண்டும், ராமஜென்மபூமியை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மசூதி கட்டுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,என்றார்.

ராமர் கோவில் விவகாரம் அரசியல் ரீதியாக பலவீனமடைந்து விட்ட போதிலும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

ராமஜென்மபூமிக்கு அருகாமை பகுதிகளில் மசூதி உருவாவதை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம், என்றார்,உமா பாரதி.

-maruppu.in

மில்லத் நகர் பள்ளி வாசல் திடலில் புதிய மின்கம்பம் மாற்றபட்டது.

IMG-20121018-WA0003(1)

                                          பல வருடமாக மில்லத் நகரில் பல மின் கம்பங்கள் விழும் நிலையில் உள்ளன. புதிய கம்பத்தை  மாற்ற பல முறை மனுக்கள் மக்களால் கொடுக்கபட்டது அதன் பலனாக மில்லத் நகர்  பள்ளிவாசல் திடலில்  விழும் நிலையில் இருந்த கம்பத்தினை 18 /10 /2012 வியாழன் அன்று மதியம் 2 :00 மணி அளவில் புதிய மின் கம்பம் மக்கள் உதவியுடன்  மாற்றப்பட்டுள்ளது.

மற்ற கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?


இடம் மில்லத் நகர்  பள்ளி வாசல் திடல்

புகைப்படம் M மன்சூர் 












பக்ரீத் பெருநாளில் பி.எட். கலந்தாய்வு ஒத்தி வைக்குமாறு மமக கோரிக்கை



                            முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாளில் நடைபெறவிருக்கும் பி.எட். கலந்தாய்வு மற்றும் கருத்தரங்குகளை ஒத்தி வைக்குமாறு மனிதநேய மக்கள் கட்சியின் மூத்தத் தலைவரும் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா தமிழக உயர்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மேலும் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

வருகின்ற 27.10.2012 அன்று முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பி.எட். பயிற்சியில் பயின்றுவரும் மாணவ/மாணவியர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்கம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதால் அதில் காலை 9:30 மணிக்கு பங்கேற்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைதூர கல்வி இயக்குநர் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பக்ரீத் தினத்தன்று தமிழக அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது. இப்புனிதநாளில் காலை 8 மணி முதல் 12 வரை முஸ்லிம்கள் தங்களின் இறை கடமைகளை நிறைவேற்றியவாறு இருப்பர். இந்த வேளையில் தேர்வு எழுத்துவதுதோ கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்பது என்பது சிரமம்.

எனவே 27.10.2012 நடைபெறவுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பி.எட். கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்க தேதிகளை மாற்றம் செய்து ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்