ஞாயிறு, 29 டிசம்பர், 2013


மதுவுக்கு எதிரான உண்ணாவிரதம்



இன்று 7ஆவது நாளாக உண்ணாவிரதம் மதுரை அரசு மருதுவானையில் காவல்துறையின் கட்டுபாட்டின் கீழ் தொடர்ந்து கொண்டு இருக்கும் சகோதரி நந்தினி. 

தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் மதுக்கடைகளை மூடுவதற்க்கான இந்த அரபோரட்டதிர்க்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கி உள்ளனர். கோவை மற்றும் திருநெல்வேலி சட்டகல்லுரி மாணவர்கள் சேலம் மாவட்ட மாணவர்கள் இதற்கு ஆதரவாக மக்களிடம் கை எழுது இயக்கம் நடத்தி வருகின்றனர். அதை முதல்வருக்கும் ,அமைச்சர்களுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க உள்ளனர்.திருநெல்வேலி சட்ட மாணவர்கள் இதற்க்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

மதுகடைகலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் துத்துக்குடி இல் மிகபெரிய பேரணி நடத்த எற்பாடு செய்துள்ளனர்.மேலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இப்போராட்டத்தை தமிழ்நாட்டில் வாழும் அவர்கள் உறவினர்கள் அனைவர்களுக்கும் கொண்டு சேர்த்து வருகின்றனர். தொலைபெசிமூலம் மனபூர்வமாக வாழ்த்தி வருகின்றனர் .கர்நாடக தமிழர்கள் அனைவருக்கும் நம் போராடும் செய்தி சென்று விட்டது .அவர்கல் அனைவரும் நம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிதுள்ளனர்.மதுரை வழக்கரின்கர்கள் சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.இளைன்கர்கள் பலர் குறுஞ்செய்தி(message ) மூலமாகவும் facebook மூலமாகவும் செய்திகளை பரப்பி வருகின்றனர் .இவ்வாறு நமது போராட்டங்களும் சூடுபிடிது வருகின்றது. முதலமைச்சர் தனி பிரிவின் சுகாதாரத்துறை மூலம் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருதுவர்கள்ளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது எப்படியாவது எங்கள் உண்ணாவிரதத்தை முடிக்க வைக்க பல்வேறு முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன .

ஆனாலும் நாங்கள் போரட்டத்தை தொடர்கிறோம். இனியும் அரசாங்கம் இதற்க்கு முடிவு கட்டவில்லையனில் தமிழ்நாடில் மதுவுக்கு எதிரான போராட்டம் தீபிடிக்கும்.இப்போதாவது வீண் வீராப்பை விட்டுவிட்டு மதுக்கடைகளை மூடினால் ஆட்சியில் இருப்பவர்கள் சிறிதாவது தப்பிக்கலாம் .இல்லையனில் தமிழ்நாட்டு இளைன்கர்கள் துரத்தி துரத்தி அடிப்பார்கள்.நண்பர்களே ! நீங்களும் முடிந்தளவு இப்போரடதிற்கு அதரவு கொடுங்கள்.

- சகோதரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி


முத்துப்பேட்டை முகைதீன்
மனிதநேய மக்கள் கட்சி