சனி, 30 ஜூன், 2012

பெரம்பலூரில் டாக்டர்கள் தர்ணா

                            அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மாணவர்கள் பாதிக்கும் தகுதி தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மாணவர்கள் பாதிக்கும் தகுதி தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், கிராமப்புற மக்களை இரண்டாந்தர குடிமக்களாக மூன்றரை வருடம் மருத்துவ படிப்பை உருவாக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்.சமூக நலனை சீரழிக்கும் போலி மருத்துவர்களை ஒழிக்க தனி மசோதா நிறைவேற்ற வேண்டும், மாநில அரசின் உரிமையை பறிக்கும் தேசிய சுகாதார மனித ஆணை மசோதாவை விலக்கி கொள்ள வேண்டும். கிராமப்புற மருத்துவமனைகளை ஒடுக்கி கார்பரேட் மருத்துவமனைகளை வளர்த்து மருத்துவ செலவினை அதிகரித்து சேவையை வியாபாரமாக்கும் மருத்துவமனை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களை இழிவுபடுத்தும் மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபிஆசாத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அகில இந்திய அளவில் ஜூன் 25ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்வது என அறிவிக்கப்பட்டது. இதன்படி, பெரம்பலூர் மா வட்ட அரசு மருத்துவமனை வ ளாகத்தில் இந்திய மருத்துவ சங் க பெரம்பலூர் கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.போராட்டத்துக்கு சங்க தலைவர் டாக்டர் திருமால் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் ராஜாமுகமது, பொருளாளர் டாக்டர் தர்மலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

- dinamalar.com