சனி, 15 செப்டம்பர், 2012

பெரம்பலூரில் பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது


பெரம்பலூரில் 15 - 09 -2012 (இன்று) காலை 11 மணியளவில் பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
 
வி களத்தூர் நகரத் தலைவர் அப்துல் ரஹீம் தலைமை தங்கினார்.
 
எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் முஹமது ரபீக் முன்னிலை வகித்தார்.
 
பி எப் ஐ மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மத் பாக்ருதீன் சிறப்புரையாற்றினார்.
 
லப்பைகுடிகாடு நகரத் தலைவர் சித்தீக் பாஷா நன்றியுரயற்றினார்.
 
அப்பாவி முஸ்லிம்களை சிறையில் தள்ளிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோசம் எழுப்பப்பட்டது.
 
இதில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.