புதன், 13 ஜூன், 2012

லண்டன் ஒலிம்பிக்: இதுவரை 76 இந்தியர்கள்தான் தகுதி





 
புதுடில்லி: சுமார் 122 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வெறும் 76 பேர் தான் தகுதி பெற்றுள்ளனர்.
 
கடந்த 2008ல் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 115 கோடியாக இருந்த போது, பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் (2008), 56 பேர் பங்கேற்றனர். இப்போதைய மக்கள் தொகை 122 கோடியாக உள்ள நிலையில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 76 பேர் (56 ஆண்கள், 20 பெண்கள்) தேர்வு பெற்றுள்ளனர். இதன் எண்ணிக்கை 85 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தவிர, இம்முறை ஹாக்கி அணி (16 பேர்) தேர்வு பெற்றிருப்பதால் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
 
தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள், லண்டன் ஒலிம்பிக்கில் 13 போட்டிகளில் பங்கேற்கின்றனர். இவர்கள் பயிற்சிக்காக மத்திய அரசு ரூ. 238 கோடி செலவிட்டது. தவிர, வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கு தனியாக ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டது.
 
இம்முறை, பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, ககன் நரங் உள்ளிட்ட 11 துப்பாக்கி சுடுதல் வீரர்கள் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சுஷில் குமார், யோகேஷ்வர் தத் உள்ளிட்ட 5 மல்யுத்த வீரர்கள் மற்றும் குத்துச்சண்டையில், ஐந்து முறை <உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் உட்பட 8 பேர் மீதும் பதக்க நம்பிக்கை உள்ளது.