வியாழன், 8 நவம்பர், 2012

இளையான்குடியில் பாஜகவின் ரவுடித்தனத்திற்கு பாடம் புகட்டியது தமுமுக



பொதுக்கூட்டத்தில் மனம்போனபடி கீழ்த்தரமாகப் பேசுவதும், தட்டிக்கேட்க ஆளில்லாததால் தறுதலைப்பேச்சுகளை மென்மேலும் வளர்ப்பதும்தான் சங்பரிவாரக் கும்பலின் கடந்தகால வரலாறு.
 

> காமத்தில் விஞ்சியது கன்னிமேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்றெல்லாம் அருவறுப்புத் தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தி, தமிழகத்தில் மதவெறி நெருப்பை இந்து முன்னணி பற்றவைத்தது.
 

> 1995க்குப் பிறகு தமுமுக இந்தக் கயமைத்தனங்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தது.
 

> அண்மையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறாகப் பேசிய சங்பரிவார பேச்சு பயங்கரவாதி மீது தமுமுக வழக்குப் பதியச் செய்தது.
 

> வேலூரில் பாஜக பிரமுகர் டாக்டர் அரவிந்த ரெட்டியின் படுகொலையைக் கண்டித்து 26.10.2012 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 

> இதன் ஒரு கட்டமாக (மாவட்டத் தலைநகரமல்லாத) இளையான்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கலந்துகொண்டு தனக்கே உரிய நடையில் மிகக் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார். அந்த சாக்கடைப் பேச்சிலிருந்து சில வரிகள்:
 

> ''வேலூர் டாக்டர் அரவிந்த ரெட்டியை இடப்பிரச்சினை காரணமாகக் கொலை செய்ததாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் காவல்துறை கைது செய்த இரண்டு முஸ்லிம் தீவிரவாதிகளை ராமநாதபுரத்தில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒரு நாய் வெளியில் விடச் செய்துள்ளது. அந்த நாய் எந்தக் கட்சி (கூட்டத்தில் இருப்பவர்கள் மனிதநேய மக்கள் கட்சி) 'மனிதநேயத்துக்கும் உங்களுக்கும் என்னடா சம்பந்தம், மனிதர்களைக் கொல்றவங்கடா நீங்க... ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளையும் இந்த நாய்தான் விடுதலை செய்ய வைத்திருக்கிறது''
 

> என்றும், இதைவிட இன்னும் கேவலமாகவும் எச்.ராஜாவின் பேச்சு அமைந்துள்ளது. தமுமுகவையும், மமக சட்டமன்றத் தலைவர் பேரா. டாக்டர் ஜவாஹிருல்லாவையும், தனிப்பட்ட முறையில்அவதூறாகவும், ஆபாசமாகவும் பேருந்து நிலையம் முன்பு பள்ளிவாசலின் அருகில் நின்று எச்.ராஜா பேசுவதை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த நகர தமுமுகவின் மக்கள் தொடர்பு அலுவலர் ஷேக் தட்டிக் கேட்டுள்ளார்.
 

> பாஜக மேடையின் முன்பு துணிச்சலாகப் போய் நின்று, தமுமுகவை அவதூறாகப் பேசிய ராஜாவே மன்னிப்புக்கேள், பேரா. ஜவாஹிருல்லாஹ்வை அவதூறாகப் பேசிய ராஜாவே மன்னிப்புக்கேள் என்று முழக்கமிட்டுள்ளார்.
 

> பாஜகவினர் அவரைத் தாக்கப் பாய்ந்துள்ளனர். உடனே காவல்துறை அதிகாரி ஒருவர் இவரை அழைத்து வந்துள்ளார்.
 

> இதோடு சென்றுவிடாமல், பாஜகவினர் மறுபடியும் வம்புக்கு வந்துள்ளனர். அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த முஸ்லிம்களை மிகக்கேவலமாக ஏசியுள்ளனர். மாவட்டச் செயலாளர் பி.எம்.ராஜேந்திரன் செருப்பைத் தூக்கிக் காட்டியுள்ளார். மல்லேந்திரன், ஆபாச வார்த்தைகளால் ஏசியுள்ளார்.
 

> இது தமுமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் பொறுமையிழக்க வைத்துள்ளது.
 

> அருவறுக்கத்தக்க நடவடிக்கையில் இறங்கியவர்களுக்கு சரமாரி அடி உதைகள் விழ, பாஜக குண்டர்கள் தெருத்தெருவாக ஓடியுள்ளனர்.
 

> ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட தமுமுகவினர், உரிய பாடம் பெற்றபிறகும் தப்பி ஓடமடியாமல் தவித்த பாஜகவினரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
 

> 50 பேர் கொண்ட பாஜகவின் குண்டர் கும்பல் இளையான்குடியில் இப்படி ஒரு பாடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
 

> மமக மாநில அமைப்புச் செயலாளர் மௌலா நாசர், மாவட்டத் தலைவர் சைபுல்லா, பொருளாளர் காஜா மற்றும் நிர்வாகிகள், கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளனர்.
 

> இனியேனும் அருவறுப்புப் பேச்சுகளை பாஜக கும்பல் நிறுத்திக் கொண்டால் நல்லது.
 
-எழில் யாசிர் 


நன்றி-http://naseertmmk.blogspot.com/

ஒடுதளமின்றி ரொக்கெட் போல பறக்கும் அதி நவீன ஆளில்லா விமானம்: ஈரான் அசத்தல்



அமெரிக்காவிற்கு போட்டியாக அதி நவீன ஆளில்லா விமானங்களை ஈரான் தயாரித்துள்ளது.
அமெரிக்கா தயாரிப்பில் உருவாகியுள்ள இவ்வகை விமானங்களுக்கு ஓடுதளம் தேவை.
 

ஆனால் ஈரான் தற்போது தயாரித்துள்ள இந்த விமானங்களுக்கு ஓடுதளம் தேவையில்லையாம்.
ரொக்கேட் போல விண்ணில் அதிவேகத்தில் பறந்து எதிரிகளை துள்ளியமாக தாக்கக்கூடியதாம்.
 

ஈரானின் அப்பாஸ் ஜாம் என்ற விஞ்ஞானி இதை வடிவமைத்து இருக்கிறார். இது போன்ற விமானம் உலகில் தயாரிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
 

ஈரானில் வருகிற ஞாயிற்றுக்கிழமை கடற்படை தளம் திறக்கப்பட உள்ளது. அப்போது இது குறித்த தகவலை அந்நாடு வெளியிடுமென தெரிகிறது.
 

கடந்த ஒக்ரோபர் மாதம் இஸ்ரேலில் ஜீவில் மாகாணத்தில் அத்து மீறி நுழைந்த ஒரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அது தங்களுடையது என லெபனான் ராணுவம் உரிமை கொண்டாடியது.
 

ஆனால் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த விமானத்தின் உதிரிபாகங்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டு லெபனானில் பொருத்தப்பட்டிருப்பதை இஸ்ரேல் ராணுவ மந்திரி அகமது வகிடி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேட்டுப்பாளையத்தில் காவி பதற்றம்



                                    கோவை மாவட்டம் மேட்டுப்பாலயத்தை சார்ந்த ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாலுகா செயலாளராக இருக்கிறார். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் அவரை சிலர் தாக்கி இருக்கின்றனர்.
இதை வழக்கம்போல சமூக மோதல்களாக சங்பரிவார் அமைப்புகள் திரித்து பதற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தனி நபர மோதல்களை வன்முறையாக்க முயன்றுள்ளனர். சுற்று வட்டாரம் முழுக்க கடைகளை அடைத்து பொது மக்களை அச்சுறுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து அரசு பேருந்தை தீ வைத்து எரித்துள்ளனர். கோவை, ஊட்டி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுள்ளனர். சில இடங்களில் இந்து முன்னணியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை உடைத்துள்ளனர்.

தீபாவளி நேரத்தில் இந்து முன்னணி நடத்தும் பந்த உள்ளிட்ட வன்முறைகளால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வர்த்தக சங்கங்களும் இந்து முன்னணியினரின் நடவடிக்கைகளை வெறுத்து உள்ளனர்.

காவி மத வெறியர்களின் வன்முறைகளால் சமூக நல்லிணக்கம் கேட்டு விடக்கூடாது என கவனத்தில் கொண்டு தமுமுக துணை பொதுச்செயலாளர் கோவை உம்மர் அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறார். அங்குள்ள நிலைமைகள் குறித்து மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களிடம் மமக பொதுச்செயலாளர் அலைபேசி வழியாக நிலைமைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதிகள் காவி வெறியர்களால் பதட்ட நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டுமென தமுமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

புதன், 7 நவம்பர், 2012

கொடுமையிலும் கொடுமை : முஸ்லிம்களின் உயிர்களுக்கு “ரயில்வே” நிர்ணயித்த விலை ரூ.15,000

கொடுமையிலும் கொடுமை : முஸ்லிம்களின் உயிர்களுக்கு “ரயில்வே” நிர்ணயித்த விலை ரூ.15,000

முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம் : “சென்னை” முதல் “டெல்லி” வரை ஒலிக்கும் குரல்கள்

முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம் : “சென்னை” முதல் “டெல்லி” வரை ஒலிக்கும் குரல்கள்

அரசியலிலிருந்து விலக தயாரா? : ஜெயலலிதாவிடம் ராமதாஸின் 10 கேள்விகள்

அரசியலிலிருந்து விலக தயாரா? : ஜெயலலிதாவிடம் ராமதாஸின் 10 கேள்விகள்

“ஹிந்து நாடு” என்று பகிரங்கமாக அறிவித்தால், எதிர்கொள்ள நாங்கள் தயார்! -மஜ்லிஸ்

“ஹிந்து நாடு” என்று பகிரங்கமாக அறிவித்தால், எதிர்கொள்ள நாங்கள் தயார்! -மஜ்லிஸ்

திங்கள், 5 நவம்பர், 2012

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சி!

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சி!

பெரம்பலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

பெரம்பலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

திருச்சியில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்

திருச்சியில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்

ஒற்றுமையை நோக்கி – தமுமுகவின் ஜமாத்தார்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஒற்றுமையை நோக்கி – தமுமுகவின் ஜமாத்தார்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? (Why Popular Front) சென்னை மண்டல மாநாடு

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? (Why Popular Front) சென்னை மண்டல மாநாடு