வியாழன், 15 நவம்பர், 2012

இந்தியாவில் பணம் இருந்தால் எதுவும் செய்யலாம்!



இந்தியாவை ஆளுவது கார்பரேட் நிறுவனங்களே, அவர்கள் நினைத்தால் இந்தியா ஸ்தம்பித்து விடும் என்று எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.
 
“இந்தியாவில் உப்பு முதல் விமானம் வரை தயாரிக்கும் ஏகபோக உரிமை கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும்.
 
கார்பரேட் நிறுவனங்கள் நிறைந்த அமெரிக்காவில் கூட எல்லா துறைகளிலும் இவர்களுக்கு அனுமதியில்லை. இந்தியாவில் உள்ள 19க்கும் மேற்பட்ட பெரும் செய்தி ஊடகங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் கட்டுப்படுத்துகின்றன. மக்கள் எந்த செய்தியை அறியவேண்டும் என்பதையும் அவர்கள்தாம் தீர்மானிக்கின்றார்கள்.
 
பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்ற சூழலும், கூட்டுப் படுகொலைக்கு தலைமை தாங்கிய நபர் மாநிலத்தை ஆளும் அபாயகரமான ஜனநாயகம் தான் இந்தியாவில் உள்ளது. கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண எந்த கட்சிக்கும் விருப்பம் இல்லை. இந்தியாவின் முழு ராணுவத்தையும் அனுப்பினாலும் கஷ்மீர் பிரச்சனை தீராது. இதர படையினரை நக்ஸல் வேட்டை என்ற பெயரில் காட்டுக்கு அனுப்பினாலும் பழங்குடியினரின் பிரச்சனைகள் தீராது.
 
40 சதவீத மக்கள் ஊட்டச்சத்துக் குறைவால் அவதியுறும் ஒரு நாட்டை எவ்வாறு சூப்பர் பவர் (வல்லரசு) என்று அழைக்கமுடியும் என்று எனக்கு தெரியவில்லை. மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் ஏழ்மையில் உள்ளனர். அவர்கள் மீது விலைவாசி உயர்வு உள்ளிட்ட போர்ப் பிரகடனம் செய்கிறது அரசு. இவற்றையெல்லாம் பரிசீலிக்காமல் அணுசக்தி நிலையங்களை நிறுவ அரசு முயலுகிறது. அன்றாடம் உருவாகும் கழிவுகளை பாதுகாக்க கட்டமைப்பு இல்லாத தேசத்தில் அணுசக்தி கழிவுகளை என்னச் செய்யப் போகின்றார்கள்?
 
சிந்திக்கவும்: * கார்பரேட் நிறுவன பெருச்சாளிகளான டாடா, பிர்லா, ரிலைன்ஸ், மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் இவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளனர். இந்த கயவர்கள் கையில் நாடு சிக்கித்தவிக்கிறது, மக்கள் விழிப்படைவார்களா?
 
* அன்றாடம் உருவாகும் சாதாரண கழிவுகளையே பாதுகாக்க நாட்டில் கட்டமைப்பு இல்லை என்ற அருந்ததிராயின் கேள்வி உண்மையானது. இது போன்ற மோசமான ஒரு சூழலில் கூடங்குளம் அணு உலை தேவையா? கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கும் கூட்டம் இதை சிந்திக்குமா?
*மலர் விழி*

சிந்திக்கவும்

எச்சரிக்கை!




திரைப்படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்து, அதன் மூலம் பிழைப்பு நடத்தும் கபோதிகளே! உங்களுக்கு தைரியம் இருந்தால் அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு எதிராக படம் எடுங்கள்! உங்களுக்கு திரானி இருந்தால் இஸ்ரேல் பயங்கரவாதத்திற்கு எதிராக படம் எடுங்கள்! உங்களுக்கு சொரனையிருந்தால் குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லீம்களை கருக்கி கொண்டானே நரபழி நாயகன் நாதாரி மோடி. அந்த ஈனப்பயலுக்கு எதிராக படம் எடுங்

கள்! உங்களுக்கு உணர்வு இருந்தால் தேசத் தந்தை மகாத்மாவை சுட்டுக் கொன்ற தேசதுரோகிகளான RSS கூட்டத்திற்கு எதிராக படம் எடுங்கள்! வரலாறு தெரியாமல் திரைபடம் இயக்கும் இயக்குனர்களே! அடிப்படை அறிவில்லாமல் செயல்படும் நடிகர்களே! உங்களுக்கு உண்மையிலேயே ஆண்மை இருந்தால் மேலே சொன்னவைகளை வைத்து படம் உருவாக்குங்கள்! அல்லது அடக்கிக் கொண்டு சும்மா இருங்கள்! உங்கள் திரைப்பட பிழைப்பை உங்கள் வரையரைக்குள் நிருத்திக் கொள்ளுங்கள்! உணர்வுகளை சீண்டி உறக்கத்தை இழந்து விடாதீர்கள்! எச்சரிக்கை!
 

SDPI கட்சியின் வி களத்தூர் நகர செயற்குழு கூட்டம் 14-11-2012


SDPI கட்சியின் வி களத்தூர் நகர செயற்குழு கூட்டம் 14-11-2012 அன்று மாலை 07.00 மணியளவில் நடைபெற்றது.


-

துப்பாக்கி கக்கிய விஷம்

http://www.pagejaffna.com/wp-content/uploads/2012/10/thuppaki--300x199.jpg

                                    நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தலைமை நிர்வாகிகள் ஜே.எஸ். ரிபாயி, அப்துல் சமது, தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல சமுதாய அமைப்பின் தலைவர்களும், தமுமுக தலைவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்கள்.

இது விசயமாக மமக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகரனிடம் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டார். அப்போது தனது கண்டனத்தை தெரிவித்து கொண்டதோடு அப்படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சந்திரசேகரன் அவர்கள் ஒரு சமூகத்தின் மனம் புன்படுவதை தான் விரும்பவில்லை என்றும், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடலாம் என்றும் கூறியிருக்கிறார். துப்பாக்கி படத்தில் திருத்தங்களை கூறுங்கள் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.

மாநில தலைமையகம் 

-tmmk.info

18-11-2012 அன்று மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி பெரம்பலூர் வருகை





இன்ஷா அல்லாஹ் வரும்   ஞாயிறு கிழமை (18-11-2012) பெரம்பலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுசமயம் காலையில் நடைபெறும் மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு பிறகு மாவட்டத்தின் பல்வேறு கிளைகளில் நடைபெறும் சிறப்பு நிகழ்சிகளில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.