புதன், 30 மே, 2012

பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை பரிசோதனை


பாகிஸ்தான் அரசு நேற்று 60 கி.மீ தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய திறன்
படைத்த ஹாத்-ஐ.எக்ஸ் 9 எனும் ஏவுகணையை விண்ணுக்கு ஏவி வெற்றிகரமாக பரிசோதனை நடத்தியுள்ளது.

அணு ஆயுதங்களை தாங்கி சென்று குறுகிய தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த ஏவுகணை பரிசோதனை நேற்று, பாகிஸ்தான் பிரபல அணு விஞ்ஞானி காலித் கித்வாய், மற்றும் இராணுவ தளபதிகள் முன்னிலையில் நடத்தப்பட்டது.

இச்சோதனை வெற்றி அளித்தமைக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு 25 கி.மீ தூரம் வரை சென்று தாக்க கூடிய சிறிய ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்திருந்தது. அதற்கு போட்டியாக பாகிஸ்தான் தற்போது சோதனை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் ஏற்கனவே அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் இரு ஏவுகணைகளை விண்ணுக்கு ஏவி பாகிஸ்தான் சோதனை நடத்தியிருந்தது.