சனி, 2 ஜூன், 2012

இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே தொலைபேசி எண் - ரோமிங் கட்டணம் இல்லை மத்திய அரசு

 

 


தொலைத் தொடர்புத் துறையின் புதிய கொள்கையின் படி, நாடு முழுவதும் எங்கு பேசினாலும் ரோமிங் கட்டணம் இல்லை
என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

தொலைத் தொடர்புத் துறையின், இந்த ஆண்டுக்கான புதிய கொள்கை, அமைச்சரவையில் சில திருத்தங்களுடன் இன்று வெளியிடப்பட்டது.

இந்த புதிய கொள்கையை வெளியிட்டுப் பேசிய, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், "புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை அமைச்சரவை சில திருத்தங்களுடன் ஒப்புதல் அளித்துள்ளது.அதன்படி ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு சென்றாலும்,

அதே தொலை பேசி எண்ணில் பேசலாம். இதற்கு ரோமிங் கட்டணம் இல்லை. இப்படி இந்தியாவின் எந்த மாநிலத்திலிருந்தும், எந்த மாநிலத்திற்கு சென்றும் அதே தொலைபேசி எண்ணில் பேசலாம். உரிய கட்டணம்தான் ஆகுமே தவிர இன்கமிங் காலுக்கும் ஆகும் ரோமிங் கட்டணம் இனி இருக்காது" என்று தெரிவித்தார்.

விரைவில் தொலைத் தொடர்புத் துறையின் புதிய கொள்கை அமுலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.