முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர்!"மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் மற்றும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங்கை நான் சிறையிலோ அல்லது வெளியிலோ சந்தித்தது இல்லை" என்று அண்மையில் பிரபல இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார். ... ஆனால் தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மாலேகான் மற்றும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங்குடன் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இருப்பது போன்ற புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது. முழுப் பூசணிக் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர்!காயை சோற்றில் மறைத்த ராஜ்நாத் சிங் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ள புகைப் படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என தெரிய வில்லை. சமீபத்தில் பாஜகவிலுள்ள உமா பாரதி, தீவிரவாதி பிரக்யா சிங்கை நேரடியாக சிறையிலேயே சென்று சந்தித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒன்றைத் திட்டமிட்டே செய்வார்கள்; முடிந்ததும், அய்யய்யோ அப்படி நடந்துவிட்டதே! அவ்வாறு நடந்தபோது நான் கண்ணீர் விட்டு அழுதேன் என தேர்ந்த நடிகனைவிட மேலாக ஊடகத்தின் முன்னிலையில் நடிப்பார்கள்! நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட பதுமைகள்! இதுதாண்டா பாஜக!
டெல்லி:பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஏன் இன்னும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவில்லை என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ... பாபர் மசூதியை இடிக்க சதி செய்ததாக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து அத்வானியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக சி.பி.ஐ. கூறி இருந்தது. ஆனால் இதுவரை அப்பீல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது நீதிபதிகள், அத்வானிக்கு எதிராக அப்பீல் செய்ய காலதாமதம் செய்வது ஏன்? என்று சி.பி.ஐ.க்கு கேள்வி விடுத்தனர். மேலும் இதுதொடர்பக விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர். தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/ தூது பேஸ்புக் : http://www.facebook.com/ThoothuOnlineமேலும் பார்க்க
இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக கொண்டாடப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும், ஜெர்மன் அதிபர் ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்தவர் நந்திதா தாஸ், இவர் படத்தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட சினிமாக்களில் ந...டித்துள்ளார். இவர் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்துள்ளார். வதோதராவில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது,
"ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.
மேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார்.
கலவரத்தை மறக்க முடியுமா?
2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்றும் நந்திதா தாஸ் கூறினார்.