புதன், 25 ஜூலை, 2012

நில வளங்களோடு நிலத்தடி நீரும் இனி அரசின் கட்டுப்பாட்டில் வரும் : பிரதமர் மன்மோகன் சிங்



                       வெகுவாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீரால், இந்தியாவின் நீராதாரம் பாதிக்கப் பட்டுவிடும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்,
இதை தடுக்க இனி நிலத்தடி நீர் அரசின் கட்டுப்பாட்டில் வரும் என்று அறிவித்திருக்கிறார்.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு என்று வெகுவாக நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதால் இந்நிலைமை தோன்றியுள்ளதாக கூறியுள்ள அவர் நிலக்கரி, தாதுப் பொருட்கள் போன்ற நிலவளங்கள் மத்திய அரசின் கீழ் உள்ளது போல, நீராதாரமும் இனி அரசின் கீழ் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கு இந்திய அரசியல் சாசன சட்டத்தின் கீழ், 252 வது சட்டப் பிரிவில் சில திருத்தங்கள் கொண்டுவரப் பட்டு, நடை முறைக்கு கொண்டுவரப்படவிருப்பதாகவும், அதன்படி, நிலத்தடி நீராதாரம் அந்தந்த மாநில அரசுகளின் கீழ் இயங்கும் என்றும் தெரிய வருகிறது.
 
வெகுவாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீரால், இந்தியாவின் நீராதாரம் பாதிக்கப் பட்டுவிடும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இதை தடுக்க இனி நிலத்தடி நீர் அரசின் கட்டுப்பாட்டில் வரும் என்று அறிவித்திருக்கிறார்.


-4tamilmedia