ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு தமிழகமெங்கும் ஆர்பாட்டம் ஒரு பார்வை.

 

வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு-திருச்சி மரக்கடை பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் தடை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 72 பேர் கைது.

திருச்சி, ஜன. 27

திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரில் இரு தரப்பினருக்கிடையே முன் விரோதம் இருந்தது. கடந்த 22ம் தேதி அங்கு நடந்த திருமண பெண் அழைப்பு நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட தெரு வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டு 10 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து 71 பேரை கைது செய்தனர். இதில், போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் அனுமதி மறுத்ததுடன் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் சபியுல்லா தலைமையில் 72 பேர் நேற்று மரக்கடை ராமகிருஷ்ண பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்

அவர்களை தடுத்து கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.














மேலும் தமிழகமெங்கும் ஆர்பாட்டம் ஒரு பார்வை.


திருவாரூரில்...














தஞ்சாவூரில்...


மதுரையில்...

புதுக்கோட்டையில்...



பெரம்பலூர் வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த காவல் துறை நிர்வாகத்தை கண்டித்துதிருவாரூர் மாவட்டம் லச்சுமா காகுடியில் பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் கொண்ட மக்களின் ஒரு பகுதியினர் வரவேற்புரை : ஷேக் அஜ்மல் தலைமை : ஹிலயத் ( மாவட்ட செயலாளர் pfi ) முன்னிலை : ஹாஜி ஷேக் (தஞ்சை மாவட்ட செயலாளர் pfi ) கோசம் : லத்திப் நன்றிவுரை: சாகுல் ஹமீது