சனி, 2 பிப்ரவரி, 2013

கற்பனையை கருத்தாக்கி காட்சியாக்கி காசுபார்க்கும் கூட்டமே குவாண்டமொவின் குரூரத்தை காட்டமுடியுமா

 

குவாண்டனமோ சிறை! உலகில் நடக்கும் ஒட்டு மொத்த சிறைக் கொடுமைகளை ஒரே இடத்தில் நிகழ்த்தும் சிறைக்கூடம். குவாண்டனமோ பே சிறை என்று அழைக்கப்படும் இந்த சித்திரவதைக் கூடத்தை கியூபாவிற்கு அருகில் கட்டி வைத்திருக்கிறது அமெரிக்கா!
குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் நிரபராதிகள்தான்! இது அமெரி...
க்காவிற்கு தெரியும் என்கிறது விக்கி லீக்ஸ்.

குவாண்டனமோ சிறைச்சாலையில் கைதிகள், தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள் அடித்துத் துவைக்கப்படும், கொடூரமான முறையில் துன்புறுத்தப் படும் செயல்கள் வரலாற்றாசிரியர்களால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே விசாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிராண்டன் நீலி, பயங்கரவாதிகளை "உரிய" முறையில் விசாரித்து உண்மையைக் கொண்டு வரும் ஆர்வமுள்ளவர். குவாண்டனமோ சிறைச்சாலை தனது முதல் கைதியை வரவேற்றபோதே அங்கு பணியில் அமர்த்தப் பட்டவர். "பெரும் பயங்கரவாதிகளை எதிர்நோக்கியிருந்த தனது ஆவலும் எதிர்பார்ப்பும், குவாண்டமோவினுள் கொண்டு வரப்படும் அப்பாவிகளைக் கண்டு பொய்த்து விட்டது" என்று கூறுகிறார் நீலி.

ங்கு அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் ஆப்கானைச் சேர்ந்த 89 வயது கிராமவாசியும், 12 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவர். 89 வயது முதியவர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால்…. அவரது விட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி எண்கள் அடங்கிய குறிப்பு கிடந்தது என்பதுதான்! இதேபோல, உள்ளூர் தாலிபான் தலைவர்களைப் பற்றி தெரிந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் அந்த 12 வயது சிறுவனை கைது செய்து இந்தச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரு கட்டத்தில் கடும் மனநிலை பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். பலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும், இன்னும் பலரோ தற்கொலை முயற்சிகளைக் கூட மேற்கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு கடும் சித்திரவதைகள் இங்கு நடந்துள்ளன.
கைதிகளை நிர்வாணமாக்கி நாய்களை ஏவி, அவர்களை கடித்துக் குதற வைத்துள்ளனர் சிறை அதிகாரிகள். தீவிரவாதிகளை விசாரணை செய்கின்றோம் என்கிற பெயரில் அவர்களை பல வகையான, கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகின்றது அமெரிக்கா.தண்ணீரில் மூழ்கடித்தல், கைதிகளின் அறைகளில் pepper spray அடித்து மூச்சி திணறடிப்பது, மூக்கின் வழியாக திரவத்தை பலமுறை செலுத்தி மயக்கமடைய செய்வது, ஆடையின்றி நிர்வாணமாக்குதல், முகத்தை பல நாட்களுக்கு மூடி வைத்தல், கேவலமான பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குதல் போன்ற சித்திரவதை பட்டியலில் தற்பொழுது இசையும் சேர்ந்து கொண்டது.

கைதிகளை சித்திரவதை செய்வதற்கான ஒரு முறையாக, இடைவிடாது இசையை கைதிகளின் செவி கிழியும் சத்தத்திற்கு சற்று குறைவான சத்தத்தில் கிட்டத்தட்ட 72 மணிநேரம் இசைக்க வைக்கின்றனர். இந்த சித்திரவதைக்காக அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவினரின் இசை பயன்படுத்துவது தெரிந்ததை அடுத்து அந்த இசைக்குழுவினர் அமெரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.குவாண்டானமோ பே, டிக் சென்னியின் அமெரிக்காவாக இருக்கலாம், ஆனால் என்னுடைய அமெரிக்கா இதுவல்ல, என்னுடைய இசை மனிதர்களை சித்திரவதை செய்வதற்காக பயன்படுத்தப்படுவது என்னை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது என்று Race against Machines இசைக் குழுவின் Morello கூறினார்.

, அநீதியையும் அராஜகத்தையும் மட்டுமே செய்யும் அமெரிக்க வெட்கமே இல்லாமல் மனித உரிமை குறித்து பேசுவது அயோக்கியத்தனம் என்றால் பாதிக்கப்பட்ட சமூகத்தையே பயங்கரவாதிகளாக மக்களை நம்பவைக்கும் சினிமாவும் ஊடகங்களும் அதைவிட கேவலமான பிறவிகள் தானே?