செவ்வாய், 12 ஜூன், 2012

குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டு சிறை?- சென்னைக் குடிமகன்களே உஷார்!

 

http://tamil.oneindia.in/img/2012/04/05-tasmac300.jpg குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் சட்டத்தை சென்னையில் முதலில் நடைமுறைப்படுத்த சென்னை போக்குவரத்துப் போலீசார் பரிசீலனை செய்து வருகின்றனர்.

மது அருந்திவிட்டு கார் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களால் சாலை விபத்துகள் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதையடுத்து போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.

வாராந்திர மட்டத்தில் 200 முதல் 300 வழக்குகள் இந்த போதை வாகன ஓட்டிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

போக்குவரத்துக் குற்றவியல் சட்டம் பிரிவு எண் 185-இன் படி மேற்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதிகபட்சமாக ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கவனமில்லாமல் வாகனம் ஓட்டியதாக பிரிவு எண் 279-இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டு ரூ.1,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இவற்றாலெல்லாம் பயன் ஏற்படவில்லை என்று கருதுகிறது சென்னை போக்குவரத்து காவல்துறை.

இதனால் தண்டனையைக் கடுமையாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் படி குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படவில்லை என்றாலும் கூட சட்டப்பிரிவு 506(1) இன் கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத படி வழக்கு தொடரப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை அமல் செய்ய மாநகர போலீஸ் துறை முடிவெடுத்துள்ளது.

ஆகவே குடிபோதையில் கார் ஓட்டும் குடிமகன்களே உஷார்!