திங்கள், 11 ஜூன், 2012

இனி வயசுக்கு வந்தா என்ன? வரலேன்னா என்ன?


          போன ஜென்மத்தில அதாவது கடந்த 2009ம் ஆண்டிலே நடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் (சிதம்பரம் கோஷ்டி தலைவர்) சிவகங்கை தொகுதிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து, அ.தி.மு.க. சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார்.

  முதலில் ராஜகண்ணப்பன் வெற்றிபெற்றதா அறிவிச்சிட்டாங்க! சந்தோசத்துல பட்டாசெல்லாம் வெடிச்சு முடிஞ்ச உடனே பார்த்தா, “3354 வாக்குகள் வித்தியாசத்தில் சிதம்பரம் வெற்றி பெற்றார்” அப்படின்னு திரும்ப ஒரு அறிவிப்பு. (அதாகப்பட்டது இந்த அறிவிப்பு, காங்கிரஸ் மத்தியில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது என்ற செய்தி கிடைத்தவுடனே வெளியிட்டுட்டாங்க)
  ராஜகண்ணப்பனுக்கு முகமே இல்லை. ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக மதுரை ஐகோர்ட் கிளையி்ல் ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்தார். இதெல்லாம் நடந்தது எப்பன்னா 2009ல (அக்பர் காலம்னு வச்சுக்குங்களேன்)

  இதுல உத்தமைரயெல்லாம் விசாரிக்க கூடாதுனு சிதம்பரம் மனுத்தாக்கல் செஞ்சாரு. (செகப்பா இருக்கிறவங்கள கோர்ட்ல விசாரிக்க கூடாது). மனுவை நீதிபதி வெங்கட்ராமன் நிராகரித்துவிட்டார். இது எப்பன்னா 2012ம் ஆண்டு ஜுன் மாதம்.

  ஒரு வழக்கை விசாரிக்கலாமாஆஆஆ? வேண்டாமாஆஆஆ? அப்படின்னு முடிவு பண்ணுறதுக்கே 3 வருஷம்னா, இவிங்க விசாரிச்சு அதை தீர்ர்ப்பா எழுதி சொல்லுவதற்கு எத்தன வருஷம் ஆகும்?
ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி அமைத்து மூன்று வருடம் முடிந்துவிட்டது. இவிங்க தீர்ப்பு சொல்லும்போது அடுத்த ஆட்சி நடந்துகொண்டிருக்கும்.

  அதன்பிறகு நீ வயசுக்கு வந்தா என்ன? வரலேன்னா என்ன?

  தீர்ப்பில் யாரை ராஜினாமா செய்யச்சொல்வர்களோ? இல்லாத பதவில ராஜினாமா செய்யசொல்வாங்களோ?


நீதி : காலம் கடந்து கொடுக்கப்படும் எந்த ஒரு சரியான தீர்ப்பும் தவறானதே!


டிஸ்கி : இப்பிடித்தான் இந்தியாவில தீர்ப்பு சொல்லும்போது வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாளி உயிரோடு இருப்பதில்லை.