புதன், 13 ஜூன், 2012

புஷ்ராவின் கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது!

வி.களத்தூரில் கடந்த மார்ச் மாதம் 24 ந்  தேதி  புஷ்ரா நல அறக்கட்டளையின் 15ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .மலர் வெளியீட்டு விழாவில் மலரின் கேட்கப்பப் பட்டிருக்கும் கேள்வி பதிலில் சரியான விடையை எழுதி அனுப்புபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .
எனவே பொதுமக்களும் ஆர்வத்துடன் விடைகளை அனுப்பினர் .இதில் சரியான விடையை எழுதியவர்களை குலுக்கல் முறையில்  முதல் முன்று நபர்களுக்கு குக்கரும் ,மற்றும்  .ஆறுதல் பரிசாக  15 நபர்களுக்கு பேஷனும் வழங்கப்பட்டது  .
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கடந்த மே மாதம் 18 ந் தேதி வெள்ளிகிழமை  ஜிம்மா தொழுகைக்கு பிறகு  மில்லத் நகர் பள்ளிவாசல் அருகில் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது .
புஷ்ரா அமைப்பாளர்கள் ,மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது .







.

 

-vkalathur.com