ஞாயிறு, 21 அக்டோபர், 2012

அமீரகத்தில் வாழும் வி.களத்தூர் பகுதி மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு


                                       வி.களத்தூர் பகுதியைச்சார்ந்த (வி.களத்தூர், மில்லத் நகர், மில்லத் நகர் மேற்கு, ரஹ்மத் நகர் மற்றும் வண்ணாரம்பூண்டி) மக்களுக்கு யூஏஈ வாழ் வி.களத்தூர் நலச்சங்கத்தின் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்களை தெறிவித்துக்கொள்கிறோம்.

நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் துபையிலுள்ள பிஸ்மில்லா ரூம் மாடியில் வருகிற வெள்ளிக்கிழமை 26.10.12, ஈத் பெருநாள் அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சுமார் 6.30 மணி அளவில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 


தற்பொழுது பதவியிலுள்ள பொருப்பாளர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது, புதிய பொருப்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதால் உறுப்பிணர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு பொதுக்குழுவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




 
இப்படிக்கு
யூஏஈ வாழ் வி.களத்தூர் நலச்சங்கம்
துபை.



நன்றி - vkalathur.net