புதன், 3 அக்டோபர், 2012

இவரைப்பற்றி தெரிந்தால் இவருடைய குடும்பத்தாருக்கு அல்லது உறவினருக்கு தெரியபடுத்தவும்


                                           இவரைப்பற்றி தெரிந்தால் இவருடைய குடும்பத்தாருக்கு அல்லது உறவினருக்கு தெரியபடுத்தவும்.:(துபாய்# 050 51 96 433 / 050 467 43 99)

துபாய் மருத்துவமனையில் திருநெல்வேலி அருகேயுள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து ராஜகோபால் ( வயது 71 ) எனற முதியவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இருதய பாதிப்பு மற்றும் பக்கவாதத்தின் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.


திருநெல்வேலி அருகேயுள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்தவ சு

டலைமுத்து ராஜகோபால். வயது 71. கடந்த 1976ம் ஆண்டு துபாய் வந்ததாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை டிரைவராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார். தனக்கு பத்மா மற்றும் சுந்தராம்பாள் ஆகிய இரு மனைவிகள் இருப்பதாகவும் அவர்களில் மூத்த மனைவிக்கு ஐந்து குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகளும் இருப்பதாக தெரிவித்தார். மூத்த மனைவி பத்மா தன்னைக் காண துபாய் வந்திருப்பதாகவும், இரண்டாவது மனைவி சுந்தராம்பாள் புதுக்கோட்டையில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். இவர் சிலநேரம் மனநலம் சரியில்லாதவரைப் போல் பேசுகிறார். எனவே இவர் கூறும் தகவல்கள் எந்த அளவு உணமையானது எனத் தெரியவில்லை.

தாயகத்தில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்ப்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இவரைப் பற்றிய முழு தகவல்கள் தெரிந்தவர்கள் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை 050 51 96 433 / 050 467 43 99 எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.