புதன், 11 ஜூலை, 2012

யாசர் அரபாத் மரணத்தில் மர்மம்: உடலை தோண்டு எடுத்து பரிசோதனை செய்ய அனுமதி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNfX9F0KnyLp3Xhacsi_QCmqHT0dDtCCnw-GIUa97lgdTRnzIRl3-Qn7TAgctgCX8PcZn7UKLqNEl43R2HRLU_0FPNzrPjVPtolHYHEmwlTNA9XKKPlwZjv_uPcuI2Iy0YccuJJU-doADI/s1600/Yasser-Arafat.jpg2.jpg


                            பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட யாசர் அரபாத், பாரீசில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தற்போது இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி சுஹா அராபத் புகார் தெரிவித்தார். எனவே அவரது உடல் மாதிரிகள் பரிசோதனைக்காக சுவிட்சர்லாந்து நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

அந்த நிறுவனம் சமீபத்தில் வழங்கிய தனது அறிக்கையில், அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தது. அதாவது அவரது உடலில் கதிர்வீச்சு விஷமான பொலேனியம் பரவி இருப்பதாக அறிவித்தது.

எனவே, இவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அது பாலஸ்தீன மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அவரது சாவின் உண்மை நிலையை அறிய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனவே யாசர் அராபத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்கான அனுமதியை பாலஸ்தீன ஜனாதிபதி மக்மூத் அப்பாஸ் வழங்கியுள்ளார்
.