புதன், 17 அக்டோபர், 2012

மின்வாரிய பொறியாளரின் காம களியாட்டம்

சுப்பிரமணி



மின்வாரிய பொறியாளரின் காம களியாட்டம்: 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம்!

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து, அதை, "லேப்-டாப்' மற்றும் சி.டி.,யில் பதிவு செய்து, ரசித்து வந்த, 57 வயதான மின் வாரியப் பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். பொறியாளரின் காம லீலைகளை அறிந்த போலீசார், அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மின் வாரிய அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரியும் கண்ணம்மாள், 44, என்பவருக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்துள்ளார். சுப்பிரமணியத்தின் ஆசை வார்த்தைக்கு அடி பணியாத கண்ணம்மாள், வால்பாறை போலீசில் புகார் செய்தார்; மின்வாரிய அதிகாரி என்பதால், சுப்பிரமணியத்தை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதன் பிறகும் கண்ணம்மாளுக்கு, செக்ஸ் டார்ச்சரும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த கண்ணம்மாள், கோவை எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்தார். எஸ்.பி., அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவை அடுத்து, கடந்த மாதம், 21ம் தேதி, சுப்பிரமணியத்தை கைது செய்த போலீசார், வழக்கு பதிந்தனர். இதையடுத்து அவர், பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். சுப்பிரமணியத்தின் பின்னணியை புரட்டிய போலீசாருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது

சுப்பிரமணியத்திடம் இருந்து, போலீசார் கைப்பற்றிய, அதிநவீன, "வீடியோ கேமரா' மற்றும் "லேப்-டாப்'பில், 13 வயது முதல், 50 வயது நிரம்பிய பெண்களுடன், பல்வேறு கோணங்களில், சுப்பிரமணியம் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள், பதிவாகி இருந்தன. மேட்டுப்பாளையம் அருகே உள்ள, பில்லூர் மின்சார வாரிய கட்டுமானப் பிரிவில், சுப்பிரமணியம் பணிபுரிந்தபோது, அங்குள்ள ஓய்வு விடுதியில், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுதவிர, அங்குள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும், "செட்டில்மென்ட்' பகுதிக்குச் சென்று, பெண்கள் குளிக்கும் பொது அறையில், ரகசிய கேமராவை பொருத்தி, அந்தக் காட்சிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை, வாடிக்கையாக வைத்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து, புரோக்கர் மூலம், கல்லூரி மாணவியரை வர வழைத்து, உல்லாசமாக இருந்ததும், "லேப்-டாப்'பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது, "காம வலையில்' பல குடும்ப பெண்களும் சிக்கி உள்ளனர். இதுகுறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

- முகவை எஸ். சம்சுதீன்